உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / ராணுவத்துக்கு ஆள் சேர்ப்பு முகாம்; கோவையில் இன்று முதல் நடக்கிறது

ராணுவத்துக்கு ஆள் சேர்ப்பு முகாம்; கோவையில் இன்று முதல் நடக்கிறது

கோவை ; ராணுவத்துக்கு ஆள் சேர்ப்பு முகாம் இன்று முதல் கோவை பி.ஆர்.எஸ்., மைதானத்தில் நடக்கிறது.இந்திய ராணுவத்தில் ராணுவ வீரர்கள், கிளார்க் உள்ளிட்ட பணிகளுக்கு இன்று முதல் ஆள் சேர்ப்பு முகாம் கோவை அவிநாசி ரோட்டில் உள்ள போலீஸ் பயிற்சி பள்ளி வளாகத்தில் நடக்கிறது. இதில் தமிழகம் மட்டுமின்றி, நாடு முழுவதும் இருந்து பலர் பங்கேற்க உள்ளனர். மொத்தம் 174 ராணுவ வீரர்கள், 50 கிளார்க் பணியிடங்கள் இதன் வாயிலாக நிரப்பப்படுகின்றன.அதன் படி இன்று (4ம் தேதி) காலை 5:00 மணிக்கு பி.ஆர்.எஸ்., வளாகத்தில் துவங்க உள்ள இந்த முகாமில், தெலுங்கானா, குஜராத், புதுச்சேரி, தாதர் மற்றும் நாகர் ஹவேலி, டாமன் டையூ மற்றும் லட்சத்தீவை சேர்ந்தவர்கள் பங்கேற்க உள்ளனர். 5ம் தேதி, ஆந்திரா, கர்நாடகாவை சேர்ந்தவர்களும், 6ம் தேதி ராஜஸ்தான், மகாராஷ்டிராவை சேர்ந்தவர்களும் பங்கேற்கின்றனர். 7ம் தேதி அரியலுார், செங்கல்பட்டு, கடலுார், தர்மபுரி, திண்டுக்கல், கள்ளக்குறிச்சி, காஞ்சிபுரம், கரூர், கிருஷ்ணகிரி, மயிலாடுதுறை, நாகப்பட்டினம், நாமக்கல், நீலகிரி, பெரம்பலுார், புதுக்கோட்டை, ராணிப்பேட்டை, தஞ்சாவூர், திருப்பத்துார், திருவள்ளூர், திருவாரூர், வேலுார் மற்றும் விழுப்புரத்தை சேர்ந்தவர்கள் பங்கேற்க உள்ளனர்.8ம் தேதி சென்னை, கோவை, ஈரோடு, கன்னியாகுமரி, சேலம், மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை, தென்காசி, தேனி, துாத்துக்குடி, திருச்சி, திருவண்ணாமலை, திருநெல்வேலி, திருப்பூர் மற்றும் விருதுநகரை சேர்ந்தவர்கள் பங்கேற்கின்றனர். 9ம் தேதி ஆலப்புழா, எர்ணாகுளம், இடுக்கி, கண்ணுார், காசர்கோடு, கொல்லம், கோட்டயம் பகுதிகளை சேர்ந்தவர்களும், 10ம் தேதி கோழிக்கோடு, திருச்சூர், மலப்புரம், பாலக்காடு, பத்தனம்திட்டா, திருவனந்தபுரம் மற்றும் வயநாடு பகுதிகளை சேர்ந்தவர்கள் பங்கேற்க உள்ளனர்.இந்த முகாமில் பங்கேற்க விண்ணப்பித்தவர்களுக்கு ஏற்கனவே அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இவர்களுக்கு முதற்கட்டமாக உடற்தகுதி தேர்வு நடத்தப்படும். அது முடிந்த பின் தகுதி அடிப்படையில் தேர்வு செய்யப்பட உள்ளனர். அதன்பின் 11ம் தேதி முதல் 16ம் தேதி வரை சான்றிதழ் சரிபார்ப்பு, மருத்துவ பரிசோதனை போன்றவை மேற்கொள்ளப்பட்டு பணிக்கு தேர்வு செய்யப்பட உள்ளனர்.

சாலையோரம் காத்திருந்த இளைஞர்கள்

ராணுவத்துக்கு ஆள் சேர்ப்பு முகாமில் இன்று தெலுங்கானா, குஜராத், புதுச்சேரி, தாதர் மற்றும் நாகர் ஹவேலி, டாமன் டையூ மற்றும் லட்சத்தீவை சேர்ந்தவர்களுக்கு நடக்கிறது. இதையடுத்து அந்த பகுதிகளை சேர்ந்த நுாற்றுக்கணக்கான இளைஞர்கள் நேற்று காலை முதல் வர துவங்கி விட்டனர். அவர்கள் பி.ஆர்.எஸ்., மைதானம் உள்ள பாலசுந்தரம் ரோட்டில் சாலையோரம் வரிசையாக இடத்தை பிடித்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ