உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / மாசாணியம்மன் கோவிலில் காணிக்கை எண்ணிக்கை

மாசாணியம்மன் கோவிலில் காணிக்கை எண்ணிக்கை

ஆனைமலை; ஆனைமலை மாசாணியம்மன் கோவிலில், நிரந்தர, தட்டு காணிக்கை உண்டியல்கள் திறக்கப்பட்டு, பக்தர்கள் செலுத்திய காணிக்கை எண்ணும் பணி நடந்தது. அதில், சலவநாயக்கன்பட்டி ஊர் பொதுமக்கள், தன்னார்வலர்கள் பங்கேற்றனர். கோவிலில் உள்ள, 22 நிரந்தர உண்டியலில், 49 லட்சத்து, 87 ஆயிரத்து, 986 ரூபாய், தட்டு காணிக்கை உண்டியலில், 25 லட்சத்து, 58 ஆயிரத்து, 664 ரூபாய் இருந்தது. மேலும், தங்கம் - 154 கிராம், வெள்ளி - 376 கிராமும் இருந்தது. உண்டியல் காணிக்கை எண்ணும் பணியில், ஹிந்து சமய அறநிலையத்துறை கோவை துணை ஆணையர் விஜயலட்சுமி, கோவில் உதவி ஆணையர் முத்துராமலிங்கம், ஆய்வாளர் சித்ரா, கோவில் பணியாளர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை