ரயில்பாதையோர மக்கள் கவனம்
கோவை: சேலம் ரயில்வே கோட்ட அறிக்கை: கோவை - ஜோலார்பேட்டை இடையே உள்ள ரயில் பாதையை வலுப்படுத்த, பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, இன்று காலை 8:00 மணிக்கு, கோவை - ஜோலார்பேட்டை இடையே அதிவேக ரயில் இயக்கி பரிசோதனை செய்யப்பட உள்ளது. இந்த ரயில்பாதையோரத்தில் வசிப்பவர்கள், தண்டவாளத்தை கடக்கும்போதும், அணுகும்போதும் எச்சரிக்கையுடன் இருக்கவும் . இவ்வாறு, அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.