உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / பவானி ஆற்றில் குளிக்க தடை

பவானி ஆற்றில் குளிக்க தடை

மேட்டுப்பாளையம்: பில்லுார் அணை நீர் பிடிப்பு பகுதிகள் மற்றும் மேட்டுப்பாளையத்தில் பெய்து வரும் மழை காரணமாக பவானி ஆற்றில் நீர் வரத்து அதிகரித்துள்ளது. இதனால் ஆற்றில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. மேட்டுப்பாளையம், தேக்கம்பட்டி, நெல்லிதுறை, சிறுமுகை, வழியாக பவானி ஆறு செல்கிறது. பவானி ஆற்றில் பில்லுார் அணையில் இருந்தும் தண்ணீர் திறந்து விடப்படுகிறது. பில்லுார் அணைக்கு நீலகிரி மாவட்டம் அப்பர் பவானி, அவிலாஞ்சி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து தண்ணீர் வருகிறது. கடந்த சில நாட்களாக பில்லுார் அணை நீர் பிடிப்பு பகுதிகளிலும், நீலகிரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் அவ்வப்போது மழை பெய்து வருகிறது. இதனால் பவானி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளது.இதுகுறித்து மேட்டுப்பாளையம் போலீசார் கூறுகையில், ''பவானி ஆற்றில் குளிக்க தடைவிதிக்கப்பட்டுள்ளது. அத்துமீறி ஆற்றில் குளித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இதுதவிர பவானி ஆற்றின் ஆபத்தான பகுதிகளில் லைப் காட்ஸ் போலீஸ் பிரிவினர் 24 மணி நேரமும் ரோந்து செல்கின்றனர்,'' என்றனர்.--


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !