உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / ஐயப்ப சுவாமி கோவிலில் பக்தர்கள் நிகழ்த்திய பஜனை

ஐயப்ப சுவாமி கோவிலில் பக்தர்கள் நிகழ்த்திய பஜனை

வால்பாறை : வால்பாறை சுப்பிரமணிய சுவாமி கோவில் வளாகத்தில் எழுந்தருளியுள்ள, ஐயப்ப சுவாமி கோவிலின், 38ம் ஆண்டு மண்டல பூஜைத்திருவிழா 18ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்குகிறது.இதனையடுத்து கோவிலில் காலை, மாலை சிறப்பு பூஜைகள் நடக்கிறது. விழாவில் நேற்று முன் தினம் இரவு,7:00 மணிக்கு, ஐயப்ப சுவாமிக்கு சிறப்பு அபிேஷக பூஜையும், அலங்கார பூஜையும் நடந்தது.பூஜையில் கலந்து கொண்ட பக்தர்கள், பஜனை பாடல்களை பாடி ஐயப்பனை மகிழ்வித்தனர். இதில் ஐயப்ப பக்தர்கள் கலந்து கொண்டனர். பூஜையில் கலந்து கொண்டவர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை