உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / வீட்டில் இறந்து கிடந்த முதியவர் சடலம் மீட்பு

வீட்டில் இறந்து கிடந்த முதியவர் சடலம் மீட்பு

மேட்டுப்பாளையம்; காரமடை அருகே வீட்டில் இறந்து கிடந்த முதியவர் சடலத்தை போலீசார் மீட்டனர்.கோவை மாவட்டம் காரமடை அருகே வெள்ளியங்காடு பகுதியை சேர்ந்தவர் திருவேங்கடம், 64. இவர் அரசு போக்குவரத்து கழகத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். கடந்த 12 ஆண்டுகளாக குடும்பத்தை பிரிந்து தனியாக வாழ்ந்து வருகிறார். இதனிடையே வீட்டில் இரவு தூங்கிக்கொண்டிருக்கும் போது இறந்து விட்டார். சுமார் 2 நாட்களாக வீடு திறக்காததாலும், வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசியதாலும் அக்கம் பக்கத்தினர் காரமடை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை கைப்பற்றி மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், இதுதொடர்பாக வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.-------


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை