உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் /  நீரில் மூழ்கி சிறுவன் பலி

 நீரில் மூழ்கி சிறுவன் பலி

போத்தனூர்: மதுக்கரை மலைசாமி கோவில் வீதி, ஜெ.ஜெ.நகரை சேர்ந்தவர் அறிவழகன். இவரது மகன் சிவசங்கர், 15. 10ம் வகுப்பு முடித்து விட்டு வீட்டிலிருந்தார். நேற்று முன்தினம் நண்பர்களான மதுக்கரையை சேர்ந்த, 16, 17 வயதுடைய மூன்று சிறுவர்களுடன் உப்பு பாறை தோட்டம் அருகிலுள்ள பயன்பாடில்லாத கல்லுக்குழிக்கு சென்றார். நீர் நிரம்பியுள்ள நிலையில் நீச்சல் தெரியாத சிவசங்கர், தெர்மாகோல் உதவியுடன் நீரில், 100 மீட்டர் தூரம் சென்றார். திரும்ப வரும்போது தெர்மாகோல் நழுவி, சிவசங்கர் நீரில் மூழ்கினார். உடன் சென்றோர் சத்தமிடவும், அப்பகுதியிலிருந்தோர் மதுக்கரை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தீயணைப்பு துறையினர் நேற்று சடலத்தை தேடி மீட்டனர். போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி