உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / பிராமணர் சங்கத்தினர் கோவையில் ஆர்ப்பாட்டம்

பிராமணர் சங்கத்தினர் கோவையில் ஆர்ப்பாட்டம்

கோவை : பிராமணர்களை இழிவாக விமர்சிப்பவர்களுக்கு எதிராக, தகுந்த பி.சி.ஆர்.,சட்டம் இயற்ற வலியுறுத்தி, அனைத்து பிராமணர் சங்கங்களின் கூட்டமைப்பினர், நேற்று கோவையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.கோவை தெற்கு தாலுகா அலுவலகம் முன் நடந்த ஆர்ப்பாட்டத்தில், அனைத்து பிராமணர் சங்க கூட்டமைப்பு தலைவர் பாலசுப்ரமணியன் பேசியதாவது: தமிழகத்தில் பிராமணர்களை இழிவுபடுத்துவதும், பூணுலை அறுப்பதும், திரைப்படங்களில் கிண்டலாக சித்தரிப்பதும் தொடர்கிறது. இதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். இழிவுபடுத்துவோர் மீது வழக்கு பதிவு செய்ய, சிறப்பு பி.சி.ஆர்., சட்டம் கொண்டு வர வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.இந்த ஆர்ப்பாட்டத்தில் இ.ம.க.,தலைவர் அர்ஜுன் சம்பத், பிராமணர் சங்கங்களின் நிர்வாகிகள் பங்கேற்றனர்.ஆர்ப்பாட்டத்தை தொடர்ந்து, கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் ஷர்மிளாவை சந்தித்து, தங்களது கோரிக்கையை மனுவாக கொடுத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 12 )

sankaranarayanan
அக் 08, 2024 20:58

பிற மதத்தவர்களுக்கு எல்லா சலுகைகளையும் தருகின்ற இந்த அரசு ஏன் பிராமண சமுதாய மக்களை வஞ்சிக்கிறது.அவர்களும் இந்தியர்கள்,தான் தமிழர்கள் தான் ஆதலால் அவர்களை இழிவுபடுத்துவர்களை இழிவாக பேசுபவர்களை கடுமையாக முளையிலேயே தண்டிக்க வேண்டும்.யாருக்கும் தீங்கிழைக்காதவர்கள், எல்லோரும் ஒற்றுமையோடு வாழ வேண்டும் என்ற எண்ணம் கொன்டவர்கள்.தமிழுக்காக பாடுபடுபவர்கள்.அவர்களை இனிமேல் யாருமே கேலி செய்வது பயமுறுத்துவது அவர்களை தீண்டுவது அவர்களைப்பற்றி தவறாக பேசுவது இவைகளை முழுவதும் இந்த தமிழக நல்லரசு கண்டித்து தகுந்த தண்டனையும் வழங்க வேண்டும்.


mei
அக் 08, 2024 20:50

இப்பிடியே வாய் ஓயாம பேசிண்டே இருங்கோ


சுந்தரம் விஸ்வநாதன்
அக் 08, 2024 20:40

Incorrect ststement. The release of the movie viswarupam was possible only by the intervention of jayalalitha. Jeyalalitha intervened based on the request of senior journalist Mr. Ramesh. Kamalahasan thanked jeya for her timely assistance. But DMK made mispropaganda stating jeya blocked the release. Let kamalahasan say now that jeya blocked the release of that movie.


mohanamurugan
அக் 08, 2024 17:33

சாதியைச் சொல்லி இழிவுபடுத்தும் நிலை ஒழிய வேண்டும். அனைவரும் சமம் என்ற நிலை வர வேண்டும். எவரும் எத்தொழிலும் செய்யலாம். திருக்கோவில்களில் சாதி ரீதியான இட ஒதுக்கீட்டை நீக்க வேண்டும். அனைத்து கோவில்களிலும் எந்த சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற நிலை வர வேண்டும்.இந்துக்கள் அனைவரும் பூநூல் அணிய வேண்டும்.சாதி வேறுபாடு பாராமல் வேத பாடசாலையில் சேர்க்கை நடைபெற வேண்டும். பிரித்தாள்வதற்காக வெள்ளையர் கொண்டு வந்த வர்ண முறை , சாதி அமைப்பு தகர்த்தெறியப்பட வேண்டும். நம் வாழ்நாளிலேயே இதை காண வேண்டும்.


Jysenn
அக் 08, 2024 16:21

You voted enmasse for annathurai in 1967 heeding to the call of Rajaji. Now it is the time for enjoyment. Enjoy.


KRISHNA
அக் 08, 2024 12:12

PCR ACT உடனே கொண்டு வர வேண்டியது முக்கியம். என்னை பொறுத்தவரை இந்த உலகத்தில் பிராமண கலாச்சாரம் சூப்பர். பிராமண கலாச்சாரத்தில் ஆன்மீகத்தின் முக்கியத்துவம், சமஸ்கிருத மந்திரம், தூய்மை, கெட்ட வார்த்தைகள் பேச கூடாது, பிற உயிரை கொள்ள கூடாது, சைவம், வன்முறை கூடாது, புகை பழக்கம், மது கூடாது, சிக்கனம், நகைச்சுவை, நாடகம், கர்நாடக சங்கீதம், பாரத நாட்டியம், கிரிக்கெட், கல்வி மற்றும் பொருளாதாரத்திற்கு முக்கியத்துவம், புத்திசாலித்தனம், அறிவு, திறமைக்கு முக்கியத்துவம் கொடுப்பது, மற்றவர்களை வெகு சீக்கிரத்தில் எடை போடும் திறன், அதி வேகமாக சிந்தித்து பேசும், செயல்படும் திறன் போன்ற அதி முக்கியமான விஷயங்கள் நிறைய உள்ளது. இதனால் தான், இளைய ராஜா, அப்துல் கலாம் போன்ற மாமேதைகள் இன்னும் நிறைய பேர் பிராமண கலாச்சாரத்தை மிகவும் போற்றினார்கள். மக்கள் பிராமண கலாச்சாரத்தை போற்றினார்கள். தமிழ் நாடு இன்று இந்த நிலைமைக்கு ஆளானதுக்கு காரணம் கடவுள் நம்பிக்கை இல்லாதவர்கள், தவறான கட்சிக்கு ஓட்டு போடுதல், நேர்மை, ஒழுக்கம்,மற்றும் பண்பு குறைந்து போனது, தேச பக்தி குறைந்து போனது, வெளி நாட்டு விஷ கிருமிகளின் மதம் மாற்றும் அயோக்கியத்தனங்கள், மக்களின் அளவுக்கு மிக அதிகமான சினிமா மோகம், தொலைக்காட்சி மோகம், கைபேசி மோகம், தவறான உணவு பழக்கம், உடல் உழைப்பு குறைவு மற்றும் உடற் பயிற்சி இல்லாதது மற்றும் மது பழக்கம். PCR ACT உடனே கொண்டு வர வேண்டியது முக்கியம். ஜெய் ஹிந்த்.


Muthu Krishnan
அக் 08, 2024 12:54

பிற உயிர்களை கொல்ல கூடாது..கொள்ள கூடாது இல்ல..


வைகுண்டேஸ்வரன்
அக் 08, 2024 11:57

ஸார், அதான், தமிழ் நாட்டில் சாதி, மத அரசியல் எடுபடவில்லையே. ஏன் இப்படி உங்கள் தலையில் நீங்களே மண்ணள்ளிப் போட்டுக் கொள்கிறீர்கள்??


வைகுண்டேஸ்வரன்
அக் 08, 2024 11:55

2026 ல் திமுக கூட்டணி மீண்டும் பெரிய வெற்றி பெற்று ஆட்சி அமைக்க இது போன்ற ஆர்ப்பாட்டங்கள் நாடெங்கும் நடத்த வேண்டும்.


R SRINIVASAN
அக் 08, 2024 08:56

முதலில் ப்ராஹ்மணர்கள் சினிமா பார்ப்பதையும் சினிமாவில் நடிப்பதையும் நிறுத்தினாலே போதும் ,இந்த அனாச்சாரங்கள் ஒழிந்து விடும் .முஸ்லிம்களை மீறி கமலஹாசனால் விஸ்வரூபம் படத்தை வெளியிடமுடிந்ததா ?


வைகுண்டேஸ்வரன்
அக் 08, 2024 14:34

கமல் ஹாசனின் விஸ்வரூபம் இரண்டு படங்களும் கேரளாவில், யூசுப் அலி யின் லூலூ மால் திரை அரங்குகளில், தமிழ் நாட்டில் ரிலீஸ் ஆகவிருந்த அதே நாளில் இங்கே ரிலீஸ் ஆனது. தமிழ் நாட்டில் ரிலீசைத் தடுத்தது ஜெயலலிதா.


VENKATASUBRAMANIAN
அக் 08, 2024 08:29

இப்பாவாவது புத்தி வந்ததே. இனிமேல் இதுபோல் எல்லா மாவட்டங்களிலும் நடத்தி காட்ட வேண்டும். அப்போதுதான் திராவிட கும்பலுக்கு புரியும்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை