லஞ்ச அதிகாரி ஜாமின் மனு டிஸ்மிஸ்
கோவை,;கோவை மாவட்டம், சூலுார் அருகே பாப்பம்பட்டியிலுள்ள வீராத்தியம்மன் கோயிலை, ஹிந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் கொண்டுவர கோரி, நிர்வாகம் சார்பில் விண்ணப்பித்தனர். இதற்கு கோவை, பாலசுந்தரம் ரோட்டிலுள்ள ஹிந்து சமய அறநிலைய துறை அதிகாரி இந்திரா,54, லஞ்சம் கேட்டார். லஞ்ச பணம், 1.50 லட்சம் ரூபாயை வாங்கும் போது, கடந்த மாதம் 17ம் தேதி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். ஜாமினில் விடுவிக்கக் கோரி, கோவை மாவட்ட முதன்மை செஷன்ஸ் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு டிஸ்மிஸ் செய்யப்பட்டது.