புகார் இருந்தால் சொல்லுங்க: மின் நுகர்வோருக்கு அழைப்பு
சோமனுார்: மின் நுகர்வோர் குறை தீர்க்கும் கூட்டம், சோமனுாரில் நாளை நடக்கிறது. தமிழ்நாடு மின் பகிர்மான கழக, சோமனுார் கோட்ட செயற்பொறியாளர் மருதாலம் அறிக்கை: தமிழ்நாடு மின் பகிர்மான கழகம், சோமனுார் கோட்டம் சார்பில், மின் நுகர்வோர் குறை தீர்க்கும் கூட்டம் 12ம் தேதி (நாளை), சோமனுார் செயற்பொறியாளர் அலுவலகத்தில் காலை 11:00 மணிக்கு, கோவை தெற்கு மேற்பார்வை பொறியாளர் தலைமையில் நடக்கிறது. சோமனுார் கோட்டத்துக்கு உட்பட்ட மின் நுகர்வோர்கள், கூட்டத்தில் பங்கேற்று தங்கள் புகார்களை அளித்து தீர்வு காணலாம். இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.