உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / உழவர் சேவை மையம் அமைக்க அழைப்பு

உழவர் சேவை மையம் அமைக்க அழைப்பு

அன்னூர்; அன்னூர் வட்டார வேளாண் உதவி இயக்குனர் பிந்து வெளியிட்டுள்ள அறிக்கை: வேளாண் பட்டப் படிப்பு அல்லது பட்டய படிப்பு முடித்த இளைஞர்களை தொழில் முனைவோர் ஆக்க உழவர் சேவை மையங்கள் துவக்கப்படுகின்றன. இத்திட்டத்தில் 10 லட்சம் முதல் 20 லட்சம் ரூபாய் மதிப்பில் உழவர் நல சேவை மையங்கள் அமைக்கப்படு கின்றன. இதில் குறைந்தது மூன்று லட்சம் முதல் அதிகபட்சம் ஆறு லட்சம் ரூபாய் வரை மானியம் வழங்கப்படும். இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !