உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / விஜய்க்கு கூடுதல் பாதுகாப்பு? மத்திய அரசு முடிவு: அ.தி.மு.க., - பா.ஜ., கூட்டணியை பலப்படுத்த வியூகம்

விஜய்க்கு கூடுதல் பாதுகாப்பு? மத்திய அரசு முடிவு: அ.தி.மு.க., - பா.ஜ., கூட்டணியை பலப்படுத்த வியூகம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

கரூர் நெரிசல் பலி சம்பவத்தை தொடர்ந்து நிலவும் பதற்றமான அரசியல் சூழலில், நடிகர் விஜய்க்கு வழங்கப்படும் மத்திய போலீஸ் பாதுகாப்பை இரு மடங்காக அதிகரிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதுகுறித்து, கட்சி வட்டாரங்கள் கூறியதாவது: தமிழக அரசியலை பொறுத்த வரை, தி.மு.க. கூட்டணி வலுவாக உள்ளது. கடந்த லோக்சபா தேர்தல் வரை, தொடர்ச்சியாக அக்கூட்டணியே பெரும் வெற்றி அடைந்துள்ளது. அதனால், தி.மு.க.வுக்கு எதிராக வலுவான கூட்டணி இருந்தால் தான், அக்கட்சியை வீழ்த்த முடியும் என்று பா.ஜ. நினைக்கிறது. அதற்காகவே, லோக்சபா தேர்தலுக்கு முன், தே.ஜ. கூட்டணியை விட்டு வெளியேறிய அ.தி.மு.க.வை, மீண்டும் கூட்டணிக்குள் கொண்டு வந்துள்ளார், மத்திய அமைச்சர் அமித் ஷா. https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=9qdcyqf3&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இருப்பினும், தி.மு.க. கூட்டணியை, தற்போதைய அ.தி.மு.க. - பா.ஜ. கூட்டணியால் வீழ்த்த முடியாது என, சமீபத்தில் எடுக்கப்பட்ட சர்வேக்கள் வாயிலாக தெரியவந்துள்ளது. அதனால், தமிழக அரசியலில் புது வரவாக இருக்கும் நடிகர் விஜயின் தமிழக வெற்றிக் கழகத்தை, எப்படியாவது கூட்டணிக்குள் கொண்டு வர வேண்டும் என்று அமித் ஷா முடிவெடுத்து, அதற்கேற்ப காய் நகர்த்தல்களை துவங்கி உள்ளார். ஆனால், தி.மு.க.வை எதிர்ப்பது போலவே, அ.தி.மு.க.வையும் பா.ஜ.,வையும் நடிகர் விஜய் தொடர்ச்சியாக விமர்சித்து வந்ததால், பழனிசாமியும், அமித் ஷாவும், இந்த விஷயத்தில் என்ன செய்வது என புரியாமல் தவித்தனர். இச்சூழ்நிலையில் தான், கரூர் த.வெ.க. கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி, 41 பேர் பலியாகினர். இச்சம்பவத்தை பெரிதாக்கி, தொடர்ந்து அரசியல் செய்வதன் வாயிலாக, தி.மு.க.வுக்கு எதிரான வலுவான கூட்டணியை கட்டமைக்க முடியும் என, அ.தி.மு.க.வும் பா.ஜ.வும் நம்புகின்றன. அதனால், கரூர் சம்பவத்தின் பின்னணியில், தி.மு.க. தரப்பு தான் இருக்கிறது என்று சொல்லும் த.வெ.க.வினர் கருத்தை, அ.தி.மு.க.வினரும், பா.ஜ.வினரும் வழி மொழிகின்றனர். நடந்த சம்பவம் குறித்து விசாரிக்க அமைக்கப்பட்டிருக்கும், ஒரு நபர் கமிஷனின் விசாரணை நியாயமாக இருக்காது; விசாரணையை சி.பி.ஐ. வசம் ஒப்படைக்க வேண்டும் என்றும், ஒரே குரலில், பா.ஜ.வும், அ.தி.மு.க.வும் சொல்வதன் பின்னணியில் கூட்டணி கணக்குகளே உள்ளன. இந்நிலையில், கரூர் சம்பவத்துக்கு ஆறுதல் சொல்லும் சாக்கில், நடிகர் விஜயிடம் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பேசியுள்ளது, 'தமிழகத்தில் பா.ஜ., கூட்டணியில் விஜயும் இணையலாம்' என்ற அறிகுறியை ஏற்படுத்தியது. விஜயுடனான தனது பேச்சில் அதை உணர்த்திய அமித் ஷா, 'கரூர் சம்பவத்துக்குப் பின், உங்களுக்கு அச்சுறுத்தல் கூடுதலாகி உள்ளது. அதனால், ஏற்கனவே வழங்கும் மத்திய அரசு பாதுகாப்பை பலப்படுத்த திட்டமிட்டுள்ளோம்' என்று தெரிவித்துள்ளார். 'கரூர் சம்பவத்தில், தி.மு.க.வை முழுமையாக குற்றம் சாட்டுவதால், அக்கட்சியினர் விஜய் மீது கோபத்தில் இருப்பர்; அதனால், த.வெ.க. தரப்பில் அடுத்தடுத்து நடக்கக்கூடிய பிரசார கூட்டங்களில் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம்' என்றும் விஜயிடம் எச்சரித்துள்ளார் அமித் ஷா. இதன்தொடர்ச்சியாக, தற்போது விஜய்க்கு மத்திய அரசு வழங்கி வரும், சி.ஆர்.பி.எப். பாதுகாப்பை இரண்டு மடங்காக்கும் வேலைகளை, மத்திய உள்துறை அமைச்சகம் துவக்கி இருக்கிறது. நெருக்கடியான சூழலில், ஆதரவாக இருப்பதன் வாயிலாக, த.வெ.க. தலைவர்களும், தொண்டர்களும் அ.தி.மு.க., - பா.ஜ. - த.வெ.க. கூட்டணிக்கு தலைமையை வலியுறுத்துவர் எனவும் திட்டமிட்டே, அதற்கேற்ப காய்களை நகர்த்துகிறார் அமித் ஷா. ஒருவேளை, எதிர்க்கட்சியினர் கோரிக்கை விடுப்பது போன்று, கரூரில், 41 பேர் பலியான சம்பவத்தின் விசாரணை, சி.பி.ஐ. வசம் ஒப்படைக்கப்பட்டால், சி.பி.ஐ. அதிகாரிகளை வைத்து, தி.மு.க.வினருக்கு நெருக்கடி கொடுக்கும் வேலைகளையும் செய்ய, அமித் ஷா தரப்பு திட்டமிட்டுள்ளது. எனவே, இந்த விஷயத்தில் அமித் ஷா நினைப்பது போல எதுவும் நடந்து விடக்கூடாது என்ற பதற்றத்தில் தி.மு.க. தரப்பு ஆழ்ந்துள்ளது. 'கரூர் வழக்கை சி.பி.ஐ. கையில் எடுத்தால், நிச்சயம் அது தி.மு.க.,வை நோக்கித்தான் பாயும். தேர்தல் நெருக்கத்தில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி உள்ளிட்டோரை விசாரணை வளையத்துக்குள் கொண்டு வந்து, மொத்த தி.மு.க.வையும் தேர்தல் வேலை பார்க்க விடாமல் செய்வர்' என, அமித் ஷா திட்டங்களை அறிந்த தி.மு.க. தலைவர்கள், தலைமையிடம் எடுத்துக் கூறி உள்ளனர். இதையடுத்து, இந்த விஷயத்தை சாதுர்யமாக எதிர்கொள்வதே, கட்சிக்கும் தலைமைக்கும் நல்லது என முதல்வர் ஸ்டாலின் நம்புகிறார். அதனால், இந்த விஷயத்தில், வேகமாக செல்ல வேண்டாம் என, பா.ஜ. தரப்பை, குறிப்பாக, அமித் ஷாவை இருதரப்புக்கும் நெருக்கமானவர்கள் வாயிலாக சமாதானப்படுத்தும் முயற்சியிலும் தி.மு.க. தரப்பு களம் இறங்கி உள்ளது. - நமது நிருபர் -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 74 )

ஜெய்ஹிந்த்புரம்
அக் 03, 2025 05:44

இந்த நிகழ்வுகள் பாஜக கூட்டணியை பலப்படுத்தியதா, இல்லை ...


ஜெய்ஹிந்த்புரம்
அக் 03, 2025 05:41

இப்போ வெளியே வந்தது பூனையா, பெருச்சாளியா சொல்லுங்க


ராஜா
அக் 02, 2025 21:00

இதுகுறித்து பத்து சாமிக்கு கோபம் வந்து பால் பானைக்குள்ளே குதித்து விடாதபடி பார்த்துக் கொள்ளுங்கள்


Barakat Ali
அக் 02, 2025 20:25

டிவிகே மட்டும் அதிமுக-பாஜக கூட்டணியில் இணையட்டும் .... விஜய்யை துக்ளக்கார் உண்டு இல்லை ன்னு ஆக்கிருவார் .... சாப்பிடக் குடுத்ததையெல்லாம் கக்குன்னு சொல்லுவார் ....


T.sthivinayagam
அக் 02, 2025 19:24

இரண்டு கோடி அதிமுகா தொண்டர்கள் உள்ளனர் என்று கூறும் அதிமுக பொதுச்செயலாளர் பழனிச்சாமி தன்னை விட விஜய்க்கு தான் அதிகம் கூட்டம் வருது என்று சொல்வது அதிமுகாவை சிறுமை படுத்தும் செயல்.


Anantharaman Srinivasan
அக் 02, 2025 19:21

விஜய்க்கு கூடுதல் பாதுகாப்பு? மத்திய அரசு முடிவு. விஜய் பாஜக என் எதிரியென்று சொன்னபின்னும் அவனை தாஜ செய்து கூட்டணியில் சேர்த்து அப்படியாவது வெற்றிபெற வேண்டிய நிலையில் மானம்கெட்டு போன நிலையில் ஒரு national party. Shame shame very shame


vivek
அக் 02, 2025 20:20

என்ன அறிவு அனந்தகிருஷ்ணன்.....


Oviya Vijay
அக் 02, 2025 19:00

என்றைக்கு தமிழகத்தில் நடிகர் விஜயின் அரசியல் பிரவேசம் ஆரம்பமானதோ அதுவரை அரசியல் களத்தில் அண்ணாமலைக்கு இருந்த முக்கியத்துவம் குறையத் தொடங்கியது என்பது உண்மை... சொந்த கட்சியிலேயே அவரை ஒதுக்கி வைக்க ஆரம்பிக்க, அதன் பின்னர் மக்களிடம் சிறுது சிறிதாக நடிகர் விஜய் பற்றிய பேச்சுக்கள் தலைதூக்க ஆரம்பித்தன... நடிகர் என்பதால் அவரது ஒவ்வொரு நடவடிக்கையையும் மீடியாக்கள் வேறு இலவசமாக விளம்பரப் படுத்த தொடங்கினர்... திமுக அதிமுக இரண்டு கட்சிகளுமே மாறி மாறி ஆட்சி செய்து வந்ததனால் மக்களுக்கு சலிப்பு ஏற்பட்டு ஒரு மாற்று வேண்டுமென நெடுங்காலமாக பெரும்பாலானோர் கருதி வந்த வேளையில் இளைஞர்களின் கவனம் சீமான் மற்றும் அண்ணாமலையை நோக்கிச் செல்ல ஆரம்பித்தன... ஆனால் தற்போது சூழ்நிலை வேறு... பாலியல் வழக்கில் சீமான் அகப்பட்டுக்கொண்டு அசிங்கப்பட்டு பெயரைக் கெடுத்துக் கொண்டிருக்கும் வேளையில், சொந்தக் கட்சியிலேயே கண்டும் காணாமல் விடப்பட்ட அண்ணாமலையும் பால்பண்ணை நிழலில் ஒதுங்கிக் கொள்ள இப்போது அரசியல் களம் முக்கியமாக இளைஞர்களின் கவனம் விஜயின் மீது சாதகமாகப் பதியத் தொடங்கியுள்ளது... இதுநாள் வரையில் சீமானுக்கு வந்த ஓட்டுக்கள் மற்றும் அண்ணாமலைக்காக பாஜகவுக்கு கிடைத்த ஓட்டுக்கள் யாவும் அப்படியே விஜயின் பக்கம் திரும்பப் போகிறது... திமுக, அதிமுக, பாமக, காங்கிரஸ், விசிக போன்ற கட்சிகளிலிருக்கும் இளைஞர்களின் ஓட்டுக்கள் கூட விஜய்க்கு மாறப் போகிறது என்பது உண்மை... அதை நான் மறுக்கவில்லை... ஆனால் மிகவும் பாதிக்கப்படப் போவது நாதக, பாஜக மற்றும் அதிமுக கட்சிகளே... இந்த கட்சிகள் சென்ற தேர்தலில் வாங்கிய ஓட்டுக்கள் சதவிகிதம் கண்டிப்பாக இந்த தேர்தலில் அதல பாதாளத்தில் விழப் போகிறது... இந்த கட்சிகளை எல்லாம் பின்னுக்குத் தள்ளி தவெக கட்சியின் ஓட்டு சதவிகிதம் திமுகவுக்கு அடுத்த படியாக இருக்கப் போகிறது... சங்கிகள் என்னதான் அவரை ஜோசப் விஜய் என்றெல்லாம் அழைத்து அவர் சார்ந்த மதத்தை அடையாளப் படுத்தி அசிங்கப்படுத்த முனைந்தாலும் இளைஞர் பட்டாளம் அதைக் கொஞ்சமும் சட்டை செய்யப் போவதில்லை... 2026 தேர்தலில் திமுக 200 தொகுதிகளுக்கு மேல் அறுதிப் பெரும்பான்மை பெற்று மீண்டும் ஆட்சியமைக்கப் போகிறது... அதே வேளையில் எதிர்க்கட்சியாக இருப்பதற்குரிய குறைந்தபட்ச தொகுதிகள் எந்தக் கட்சிக்கும் கிடைக்காமல் எதிர்க்கட்சிகளே இல்லாத நிலை உருவாகப் போகிறது... ஆனால் ஓட்டு சதவிகிதத்தில் தவெக இரண்டாம் இடம் பெறும்... அதே வேளையில் 2031 சட்டமன்ற தேர்தல் திமுகவுக்கு சாதகமானது அல்ல... அது தவெக தலைமையில் அமையும்... காலம் பதில் சொல்லும்...


ஜெய்ஹிந்த்புரம்
அக் 03, 2025 05:39

2031 இல் விஜயோட ரசிகக் குஞ்சுகளுக்கு அறிவு வந்து விடும் என்று கணக்கு போடுகிறீர்களா? “என் பேச்சை நானே கேக்க மாட்டேன்” னு பஞ்ச் பேசி தறுதலையாக வளர்ந்த கூட்டம். என்ன தான் நாசமாப் போனாலும் தன் தப்பை ஒத்துக் கொள்ளாத கூட்டம். கரூர் துயர சம்பவத்திற்கு விஜய் இம்மியளவாவது பொறுப்பேற்று தப்பாகி விட்டது, மன்னியுங்கள் ன்னு முணுமுணுக்கக் கூட இல்லையே வேண்டாததற்கு எவ்வளவு சில்லறைத்தனமாக முதல்வரை வம்பிழுத்தார் லாயக்கில்லை பார்த்தீர்களா? நீங்க ரொம்ப பில்ட்அப் தராதீங்க 2031 தானே? I will be there.


Natchimuthu Chithiraisamy
அக் 02, 2025 17:42

அதிமுகவில் குழப்பமே இல்லை என்றாலும் தலைமையை ஒதுக்கியதால், அவர்கள் குழப்பத்தை கொண்டுவருவார்கள் அது அதிமுகவுக்கு பின்னடைவை தரும் இந்த வாய்ப்பை பின்பற்றி கூட்டணி சேர்த்தால் வெற்றி உறுதி. அது விஜக்கும் நல்லது. தனித்து நிற்கும் பட்சத்தில் இறந்த இந்துக்களுக்கும் இந்து ரசிகர்களுக்கும் துரோகம் தான் நடக்கும். நல்ல அனுபவம் பெற்ற பிறகு முதல்வர் ஆகலாம் சொத்துக்களையும் பராமரிக்க முடியும். எடப்பாடிக்கு ஆதரவு கொடுப்பது நல்லது தரும். விஜயகாந்தும் எதிர்க்கட்சி தலைவர் ஆகியுள்ளார். அண்ணாமலையும் படிப்பர் என்று நினைக்கிறன். படத்தில் காட்டியதை முன்பே வாசகர் கருத்தில் சொல்லி உள்ளேன்


Sangi Mangi
அக் 02, 2025 17:24

ஆனால், தி.மு.க.வை எதிர்ப்பது போலவே, அ.தி.மு.க.வையும் பா.ஜ.,வையும் நடிகர் விஜய் தொடர்ச்சியாக விமர்சித்து வந்ததால், பழனிசாமியும், அமித் ஷாவும், இந்த விஷயத்தில் என்ன செய்வது என புரியாமல் தவித்தனர். இச்சூழ்நிலையில் தான், கரூர் த.வெ.க. கூட்டத்தில் 41 பேர் பலியாக்கினார்கள்..


ஆசாமி
அக் 02, 2025 16:52

என்னத்துக்கு அதிக பாதுகாப்பு


சமீபத்திய செய்தி