மேலும் செய்திகள்
அரசு பள்ளி மாணவிகளுக்கு பரிசு
07-Jun-2025
பெ.நா.பாளையம்; நரசிம்மநாயக்கன்பாளையம் அரசு உயர்நிலைப் பள்ளியில் பள்ளி கல்வித்துறை சார்பில் மாணவ, மாணவியர்களுக்கான செஸ் போட்டி நடந்தது.பள்ளி வளாகத்தில், 14 மற்றும், 17 வயதுக்கு உட்பட்ட பிரிவுகளில் போட்டிகள் நடந்தன. இதில், 14 வயதுக்கு உட்பட்ட பிரிவில் சஸ்மிதா, தக்சிதா, ஸ்ரீஜா ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். மாணவர் பிரிவில் ரித்திஷ் குமார், ஹரீஷ், மதன் ஸ்ரீ ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். இவர்கள் வட்டார அளவில் நடக்கும் செஸ் போட்டியில் கலந்து கொள்வர். போட்டிக்கான ஏற்பாடுகளை நரசிம்மநாயக்கன்பாளையம் அரசு உயர்நிலைப்பள்ளி (பொறுப்பு) தலைமை ஆசிரியர் பிரேம்நாத், உடற்பயிற்சி ஆசிரியர் தனக்குமார் ஆகியோர் செய்து இருந்தனர்.
07-Jun-2025