உளவியல் படித்தவர்களை அழைக்கிறார் கலெக்டர்
கோவை; அரசு கூர்நோக்கு இல்லங்களில் தங்கியிருக்கும் சிறார்களுக்கு, உளவியல் ஆலோசனை மற்றும் மனதை ஆற்றுப்படுத்தும் சேவை வழங்க, உளவியலில் முதுகலை பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.கோவை கலெக்டர் அறிக்கை: சென்னை மற்றும் செங்கல்பட்டில், சிறுவர் கூர்நோக்கு இல்லங்களில் தங்கியிருக்கும் சிறார்களுக்கு, உளவியல் ஆலோசனை மற்றும் மனதை ஆற்றுப்படுத்தும் சேவை வழங்க, மதிப்பூதிய அடிப்படையில் ஆட்கள் நியமிக்கப்படவுள்ளனர். உளவியல் மற்றும் ஆற்றுப்படுத்துதலில், முதுகலைப்பட்டம் பெற்ற நபர்கள், வரும் 27க்குள் விண்ணப்பிக்கலாம்.இவ்வாறு, கலெக்டர் கூறியுள்ளார்.