கல்லூரி மாணவி மாயம்
போத்தனூர்: ஈச்சனாரி செல்லும் வழியிலுள்ள தனியார் கல்லூரியில், கன்னியாகுமரியை சேர்ந்த, 21 வயது பெண், முதலாமாண்டு படித்து வந்தார். கடந்த, 14ல் தற்போது தங்கியுள்ள சுந்தராபுரம் அன்னை இந்திரா நகர் வீட்டிலிருந்து, கல்லூரிக்கு சென்றவர், வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்காததால், அவரது தந்தை சுந்தராபுரம் போலீஸ் ஸ்டேஷனில் புகார் செய்தார். போலீசார் மாணவியை தேடுகின்றனர்.