மேலும் செய்திகள்
கட்டட கழிவு கொட்ட வந்த டிராக்டர் சிறைபிடிப்பு
26-May-2025
வால்பாறை: வால்பாறை அருகே, ரோட்டோரத்தில் கொட்டப்பட்டுள்ள கட்டடக்கழிவால், வாகன ஓட்டுநர்கள் சிரமத்துக்கு உள்ளாகின்றனர்.வால்பாறை நகரில் பல்வேறு இடங்களில் புதியதாக கட்டுமானப் பணிகள் நடக்கிறது. இந்நிலையில், இடிக்கப்பட்ட பழைய கட்டட கழிவை, லாரியில் கொண்டு வந்து பொள்ளாச்சி வழித்தடத்தில், ரோட்டோரத்தில் குவிக்கின்றனர்.குறிப்பாக, வால்பாறையிலிருந்து சோலையாறுடேம், புதுத்தோட்டம், கருமலை உள்ளிட்ட பகுதியில் ரோட்டோரத்தில், கட்டடக்கழிவு குவிக்கப்படுகிறது.நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளும் இதை கண்டு கொள்ளாததால், கட்டட கழிவு குவிப்பது அதிகரித்து வருகிறது.மழையின் போது, கட்டட கழிவு மண் ரோட்டில் தேங்குவதால், இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் விபத்துக்குஉள்ளாகின்றனர்.ரோட்டோரத்தில் கட்டடக்கழிவு கொட்டுவதை தடுக்க வேண்டும். விதிமுறை மீறி கட்டட கழிவு கொட்டும் லாரியை பிடித்து, உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்க வேண்டும், என, பொதுமக்கள் வலியுறுத்தினர்.
26-May-2025