ஓடும் ரயிலில் இருந்து தவறி விழுந்து மரணம்
கோவை: ஓடும் ரயிலில் இருந்து தவறி விழுந்த, 51 வயது நபர் உயிரிழந்தார். அசாம் முதல் கோவை வழியாக கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணித்த நபர், (மே 23) மதியம், 3:30 மணியளவில் வடகோவை அருகே தவறி கீழே விழுந்தார். உடனடியாக, 108 ஆம்புலன்சில் அரசு மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டார். மருத்துவமனையில் அவசர சிகிச்சை அளிக்கப்பட்டும் (மே 22) காலை உயிரிழந்தார். இந்நபர் சார்ந்த எவ்வித விபரங்களும் தெரியாத நிலையில், உடல் அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. ரயில்வே போலீசார் விசாரித்து வருகின்றனர்.