உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / தினமலர் - பட்டம் மெகா வினாடி- வினா போட்டி: அரையிறுதிக்கு முன்னேறிய மாணவ, மாணவியர்

தினமலர் - பட்டம் மெகா வினாடி- வினா போட்டி: அரையிறுதிக்கு முன்னேறிய மாணவ, மாணவியர்

கோவை : 'தினமலர்' நாளிதழ் மாணவர் பதிப்பான 'பட்டம்' இதழ் சார்பில் நடந்த, 'பதில் சொல்; பரிசை வெல்' என்ற வினாடி - வினா போட்டியில் மாணவ, மாணவியர் ஆர்வமுடன் பதிலளித்து அரையிறுதிக்கு முன்னேறினர்.'தினமலர்' நாளிதழ் மாணவர் பதிப்பு 'பட்டம்' இதழ் சார்பில், 2018ம் ஆண்டு முதல் 'வினாடி - வினா' போட்டி நடத்தப்பட்டு வருகிறது. இந்தாண்டுக்கான 'வினாடி-வினா விருது, 2024-25' போட்டி, 'தினமலர்' நாளிதழ் மாணவர் பதிப்பான 'பட்டம்' மற்றும் சென்னை இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி சார்பில் நடக்கிறது. இவர்களுடன், எஸ்.எஸ்.வி.எம்., கல்வி நிறுவனமும் கரம் கோர்த்துள்ளது.'கோ-ஸ்பான்சர்' ஆக சத்யா ஏஜென்சிஸ் உள்ளது. முன்பதிவு செய்த, 150க்கும் மேற்பட்ட பள்ளிகளில் இப்போட்டி நடத்தப்பட்டு வருகிறது. பள்ளி அளவில் முதலிடம் பிடிக்கும் மாணவர்களுக்கு, அரையிறுதி போட்டி நடக்கும்.இதில், இருந்து எட்டு அணிகள் தேர்வு செய்யப்பட்டு, இறுதிப்போட்டி நடத்தப்படும். இறுதி போட்டியில் இடம்பெறும் மாணவர்களுக்கு, பரிசுகள் வழங்கப்படவுள்ளன.கணபதி, சி.எம்.எஸ்., மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் நடந்த வினாடி-வினா நிகழ்ச்சியில், 57 பேர் தகுதி சுற்றுக்கான பொது அறிவுத்தேர்வு எழுதினர்.அதிக மதிப்பெண் பெற்ற, 16 பேர், எட்டு அணிகளாக பிரிக்கப்பட்டு வினாடி-வினா போட்டி நடத்தப்பட்டது. மூன்று சுற்றுகளாக நடந்த இப்போட்டியில், 'ஏ' அணியை சேர்ந்த எட்டாம் வகுப்பு மாணவர் சஞ்சீவ், ஆறாம் வகுப்பு மாணவர் மோகுல் சாய் ஆகியோர் முதலிடம் பிடித்தனர்.வெற்றி பெற்றவர்களுக்கு, பள்ளி முதல்வர் ஸ்ரீபிரியா மற்றும் துணை முதல்வர் சாபு ஆகியோர் பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கினர். தமிழ் ஆசிரியை சரண்யா, நுாலகர் சுமித்ரா ஆகியோர் உடனிருந்தனர்.* கணபதி, கே.ஆர்.புரம், கோவை கலைமகள் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் நடந்த போட்டியில், 50 பேர் தகுதிச் சுற்றுக்கான தேர்வு எழுதினர். இதில், அதிக மதிப்பெண் பெற்ற, 16 பேர் எட்டு அணிகளாக பிரிக்கப்பட்டு, வினாடி-வினா நடத்தப்பட்டது.இதில், 'ஏ' அணியை சேர்ந்த எட்டாம் வகுப்பு மாணவி நார்த்திகா, ஐந்தாம் வகுப்பு மாணவி தவினா ஆகியோர் முதலிடம் பிடித்தனர். வெற்றி பெற்றவர்களுக்கு, பள்ளி துணை முதல்வர் ஜமுனாராணி பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கினார். ஆங்கில ஆசிரியர் கார்முகில், ஆய்வக உதவியாளர் மல்லிகா ஆகியோர் உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை