டாக்டர் என்.ஜி.பி., கல்வி குழும மாணவர்களுக்கு ஊக்கத்தொகை
கோவை; டாக்டர் என்.ஜி.பி., கல்வி குழுமங்களின் சார்பில் மாணவர்களுக்கு, கல்வி ஊக்கத்தொகை மற்றும் விருது வழங்கும் விழா, கல்லுாரி கலையரங்கில் நடந்தது. டாக்டர் என்.ஜி.பி., ஆராய்ச்சி மற்றும் கல்வி அறக்கட்டளையின் தலைவர் டாக்டர் நல்ல பழனிசாமி தலைமை வகித்தார். சிறப்பு விருந்தினராக பங்கேற்ற, எழுத்தாளர் மரபின் மைந்தன் முத்தையா பேசுகையில், ''காலத்தின் மதிப்பை உணர்ந்து, கற்றலின் வழியாக, அறிவாற்றல், தகவல் தொடர்பு, பல் திறன்களை மாணவர்கள் வளர்த்துக்கொள்ள வேண்டும்,'' என்றார்.விழாவில், கல்வி மற்றும் விளையாட்டுத்துறையில் சாதனை புரிந்த மாணவர்களுக்கு ஜி.பி.,எம்பவர்மென்ட் விருதுகள் மற்றும் திறமையான மாணவர்களுக்கு, கல்வி உதவித்தொகை வழங்கி சிறப்பிக்கப்பட்டது. டாக்டர் என்.ஜி.பி.,கல்விக்குழுமங்களின் செயலர் தவமணிதேவி, அறங்காவலர்கள் அருண், மதுரா, முதன்மை செயல் அலுவலர் புவனேஸ்வரன், முதன்மை செயல் இயக்க அலுவலர் நடேசன், டாக்டர் என்.ஜி.பி., கலை அறிவியல் கல்லுாரியின் முதல்வர் சரவணன், தொழில்நுட்பக் கல்லுாரி முதல்வர் பிரபா பங்கேற்றனர்.