உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / கல்விக்கடன் முகாம் ரூ.4.44 கோடி வழங்கல்

கல்விக்கடன் முகாம் ரூ.4.44 கோடி வழங்கல்

- நமது நிருபர் -உயர்கல்வியில் சேர்ந்த மாணவர்கள் கல்விக்கட்டணம் செலுத்த, வங்கி கடன் பெறும் முகாம், கோவை பி.எஸ்.ஜி., பொறியியல் கல்லுாரியில் நடந்தது.கலெக்டர் பவன்குமார் தலைமை வகித்தார். வங்கியின் பங்கு குறித்து, கனரா வங்கியின் துணை மேலாளர் காஞ்சனா ஸ்ரீ விளக்கினார். முகாமில், 42 மாணவ, மாணவியருக்கு, 4.44 கோடி ரூபாய் கல்விக்கடன் வழங்கப்பட்டது. மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரன் உட்பட பலர் பங்கேற்றனர். மாணவர்களுக்கு தேவையான சான்றிதழ் வழங்கும் வகையில், இ---சேவை மையம் ஏற்படுத்தப்பட்டிருந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி