மேலும் செய்திகள்
குதிரை வாகனத்தில் பரிவேட்டை
15-Mar-2025
மேட்டுப்பாளையம்; காரமடை அரங்கநாதர் கோவிலில் நேற்று பங்குனி மாத சுக்ல பட்ச, ஏகாதசி வைபவம் நடந்தது. அதிகாலை நடை திறந்து, மூலவர் அரங்கநாத பெருமாளுக்கு, சிறப்பு திருமஞ்சனம், கால சந்தி பூஜை ஆகியவை நடந்தன. பின்பு ஸ்ரீதேவி, பூதேவி சமேதராக அரங்கநாத பெருமாள், சிறப்பு அலங்காரத்தில், கல்யாண மண்டபத்தில் எழுந்தருளினார். அங்கு விஷ்வக்சேனர் ஆராதனம், புண்யா வதனம், கலச ஆவாஹனம், ஸ்தபன திருமஞ்சனம் ஆகியவை நடந்தன. பச்சை நிற பட்டு உடுத்திய அரங்கநாத பெருமாள், ஸ்ரீதேவி, பூதேவி சமேதராக வெள்ளி சப்பரத்தில், வெண்பட்டு குடை சூழ, மேள தாளங்கள் முழங்க, கோவிலில் வலம் வந்து ஆஸ்தானம் அடைந்தார். தொடர்ந்து உச்சக்கால பூஜை, சாற்றுமுறை சேவிக்கப்பட்டு தீர்த்த பிரசாதம் வழங்கப்பட்டது. இந்த வைபவத்தில் கோவில் ஸ்தலர்த்தார்கள் வேதவியாச ஸ்ரீதர் பட்டர், திருமலை நல்லான் சக்கரவர்த்தி பாலாஜி, அர்ச்சகர்கள், ஆகியோர் பங்கேற்றனர். விழா ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் பேபி ஷாலினி செய்திருந்தார்.
15-Mar-2025