மேலும் செய்திகள்
காஞ்சிபுரத்தில் நாளை மின் குறைதீர் கூட்டம்
16-Apr-2025
கோவை, ; தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம், குனியமுத்துார் மற்றும் டாடாபாத் அலுவலகங்களில், மின் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் நாளை நடக்கிறது.குனியமுத்துார் மின் வாரிய அலுவலகத்தில், காலை, 11:00 மணிக்கு நடக்கும் கூட்டத்தில், மேற்பார்வை பொறியாளர் (கோவை, தெற்கு) சுப்ரமணியன் பங்கேற்கிறார்.டாடாபாத் மின் வாரிய அலுவலகத்தில், காலை, 11:00 மணிக்கு நடக்கும் கூட்டத்தில், மேற்பார்வை பொறியாளர் (கோவை, மாநகர்) சதீஷ்குமார் பங்கேற்கிறார்.இந்த மின் வாரிய அலுவலகங்களுக்கு உட்பட்ட மின்நுகர்வோர், கூட்டத்தில் பங்கேற்று தங்கள் மின் இணைப்பு உள்ளிட்ட மின் வாரியம் தொடர்பான புகார்களை நேரில் தெரிவித்து பயனடையலாம்.இத்தகவலை, செயற்பொறியாளர்கள் சுரேஷ் (குனியமுத்துார்), பசுபதீஸ்வரன் (டாடாபாத்) தெரிவித்துள்ளனர்.
16-Apr-2025