உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / மின்நுகர்வோர் குறைதீர் கூட்டம்

மின்நுகர்வோர் குறைதீர் கூட்டம்

பொள்ளாச்சி; நெகமம் கோட்ட அளவிலான மின்நுகர்வோர் குறைதீர் கூட்டம் நாளை (16ம் தேதி) மேற்பார்வை பொறியாளர் சுப்ரமணியன் தலைமையில் காலை, 11:00 மணி முதல் நடக்கிறது. நெகமம் செயற்பொறியாளர் அலுவலகத்தில் நடைபெறும் கூட்டத்தில், நெகமம் கோட்டத்துக்கு உட்பட்ட மின்நுகர்வோர்கள் பங்கேற்று தங்களது குறைகளை தெரிவிக்கலாம்.இத்தகவலை நெகமம் மின்வாரிய செயற்பொறியாளர் சங்கர் தெரிவித்தார்.அங்கலக்குறிச்சி கோட்ட அளவிலான மின்நுகர்வோர் குறைதீர் கூட்டம் நாளை காலை, 11:00 மணி முதல் மதியம், 1:00 மணி வரை உடுமலை மேற்பார்வை பொறியாளர் தலைமையில் நடக்கிறது.அங்கலக்குறிச்சி கோட்ட அலுவலகத்தில் நடைபெறும் கூட்டத்தில், கோட்டத்துக்கு உட்பட்ட மின்நுகர்வோர்கள் பங்கேற்று தங்களது குறைகளை தெரிவித்து பயன்பெறலாம். இத்தகவலை, அங்கலக்குறிச்சி மின்வாரிய செயற்பொறியாளர் தேவானந்த் தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை