உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம்

மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம்

கோவை: கோவை நகரியம், கு.வடமதுரை மற்றும் குனியமுத்துார் மின் வாரிய அலுவலகங்களில், மின் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் நாளை (நவ. 5ம் தேதி) நடக்கிறது. நகரியம் மின் வாரிய அலுவலகத்தில் காலை 11 மணிக்கு நடக்கும் கூட்டத்தில், மேற்பார்வை பொறியாளர் (மாநகர்) சதீஷ்குமார் பங்கேற்கிறார். கு.வடமதுரை மின் வாரிய அலுவலகத்தில் காலை 11 மணிக்கு நடக்கும் கூட்டத்தில், மேற்பார்வை பொறியாளர் (கோவை, வடக்கு) குணவர்த்தினி பங்கேற்கிறார். குனியமுத்துார் மின் வாரிய அலுவலகத்தில் காலை 11 மணிக்கு நடக்கும் கூட்டத்தில், மேற்பார்வை பொறியாளர் (கோவை, தெற்கு) சுப்ரமணியன் பங்கேற்கிறார். இந்த மின் வாரிய அலுவலகங்களுக்கு உட்பட்ட மின் நுகர்வோர், இக்கூட்டத்தில் பங்கேற்று தங்கள் மின் இணைப்பு, பெயர் மாற்றம் உள்ளிட்ட மின் வாரியம் தொடர்பான புகார்களை நேரில் தெரிவித்து பயனடையலாம். இத்தகவலை, நகரியம் செயற்பொறியாளர் பசுபதீஸ்வரன், கு.வடமதுரை செயற்பொறியாளர் சண்முகசுந்தரம் மற்றும் குனியமுத்துார் செயற்பொறியாளர் (பொறுப்பு) சென்ராம் தெரிவித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை