உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / உயர்மாடி கட்டடங்களில் விபத்து நடந்தால் மீட்பது குறித்த ஒத்திகை

உயர்மாடி கட்டடங்களில் விபத்து நடந்தால் மீட்பது குறித்த ஒத்திகை

கோவை : உயர்மாடி கட்டடங்களில் ஏற்படும் விபத்துகளில் இருந்து, மக்களை மீட்பது குறித்து தீயணைப்புத்துறையினரின் ஒத்திகை நிகழ்ச்சி நடந்தது.கோவையில் பல மாடி கட்டடங்களில் ஏற்படும் விபத்துகளின் போது, மக்களை மீட்க வான் நோக்கி நகரும் (ஸ்கை லிப்ட்) வாகனம் பயன்படுத்தப்படுகிறது. இந்த 'பிராண்டோ ஸ்கை லிப்ட்' வாகனம் மூலம், 54 மீட்டர் உயரம் உள்ள இடங்களில் தீ விபத்துகளில் சிக்கும் பொதுமக்களை மீட்க முடியும். இந்த வாகனத்தை பயன்படுத்தி, பொதுமக்களை மீட்பது குறித்த ஒத்திகை நிகழ்ச்சி, நேற்று ரேஸ்கோர்ஸ் தாஜ் விவாந்தா ஓட்டலில் நடந்தது. தீயணைப்புத்துறை மாவட்ட அலுவலர் புளுகாண்டி முன்னிலையில், உதவி மாவட்ட அலுவலர் ராமச்சந்திரன் தலைமையில் நடந்த இந்நிகழ்ச்சியில், 12 தீயணைப்புத்துறை அலுவலர்கள், பணியாளர்கள் மற்றும் ஓட்டல் ஊழியர்கள் பங்கேற்றனர். தங்கள் அலுவலகத்தில், நிறுவனத்தில் ஒத்திகை நிகழ்ச்சியை நடத்த விரும்புவோர், தீயணைப்புத்துறையை தொடர்பு கொள்ளலாம் என, அதிகாரிகள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை