உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / மே 30ல் விவசாயிகள் குறைதீர் கூட்டம்

மே 30ல் விவசாயிகள் குறைதீர் கூட்டம்

கோவை : கோவை மாவட்டத்தில் விவசாயிகளின் பல்வேறு பிரச்னைகளுக்கு தீர்வு காணும் வகையில் மே மாதத்திற்கான வேளாண் உற்பத்திக்குழு கூட்டம் மே 30 அன்று வெள்ளிக்கிழமை காலை 9.30 மணிக்கு கலெக்டர் அலுவலகத்தில் நடக்கிறது. இதைத்தொடர்ந்து காலை 10.30 மணியளவில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம், கலெக்டர் தலைமையில் நேரடியாக நடத்தப்பட உள்ளது. இக்கூட்டத்தில் விவசாயிகள் பங்கேற்று விவசாயம் தொடர்பான பிரச்னைகளுக்கு தீர்வு காணலாம். எனவே விவசாயம் தொடர்பான பிரச்னைகளுக்கு மனுக்களை அளிக்க கோவை கலெக்டர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை