உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / கோவை குற்றாலத்தில் வெள்ளப்பெருக்கு

கோவை குற்றாலத்தில் வெள்ளப்பெருக்கு

தொண்டாமுத்தூர்: மேற்கு தொடர்ச்சி மலையில் பெய்து வரும் தொடர் மழையால், கோவை குற்றாலத்தில் சுற்றுலா பயணிகளுக்கு, வனத்துறையினர் தடை விதித்துள்ளனர். போளுவாம்பட்டி வனச்சரகத்திற்கு உட்பட்ட, மேற்கு தொடர்ச்சி மலையில் கோவை குற்றாலம் நீர்வீழ்ச்சி அமைந்துள்ளது. கடந்த ஒரு வாரமாக, மேற்கு தொடர்ச்சி மலையில் பெய்து வரும் கனமழை காரணமாக, நீர்வீழ்ச்சியில் வெள்ளப்பெருக்கு ஏற் பட்டுள்ளது. கோவை மாவட்டத்திற்கு, ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளதால், சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி, மறு அறிவிப்பு வரும் வரை, கோவை குற்றாலத்தில், சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக, வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி