வாசகர்கள் கருத்துகள் ( 8 )
இது ஒரு வெத்துவேட்டு... காமெடி பீஸ்...
1. வங்கதேசத்தைப் பற்றி பேசியுள்ளீர்கள். பாதி இந்தியாவிடமில்லையென்றும் சொல்லியுள்ளீர்கள். அன்றைய மறுபாதி கிழக்குப் பாகிஸ்தான். அன்று சுதந்திர இந்தியா மதத்தால் பிரிவினையானது உடைந்தும் போனது. மதத்திற்க்கு அவ்வளவு சக்தி. பிரச்சனை அவர்களுக்கு நம் மதத்தின் மீது நம்பிக்கையில்லை. மதச் சார்பற்றக் கொள்கையிலும் அவர்களுக்கு நம்பிக்கையில்லை. அதனால் பிரிந்தார்கள். 2. பிரச்சனை அதோடு நிற்கவில்லை. 1971-ல் கிழக்குப் பாகிஸ்தான் பிரிவினை கேட்டு மேற்கு பாகிஸ்தானோடு போராடினார்கள். மேற்கு பாகிஸ்தான் ராணுவத்தினரின் அடக்குமுறை தாங்காது அன்று வங்கதேச எல்லையில் அகதிகள் தஞ்சம் அடைந்தார்கள். இந்தியாவின் பாதுகாப்பு நிலைப்பாடு கருதி இந்தியாவின் தலையீடு அவசியமாயிற்று. இந்திய நாட்டின் தலையீட்டால் உருவானதுதான் இன்றைய சுதந்திர வங்கதேசம். அன்று இந்தியா மட்டும் தலையிடவில்லை யென்றால் இன்று வங்கதேசம் இல்லை அன்று வாழ்ந்த மக்களும் இன்று விலாச மில்லாமல் போயிருப்பார்கள். அந்த அளவிற்கு அன்று ராணுவத்தினரின் அடக்குமுறைகள் கொடூரங்கள் . ஆனால் இன்று இந்தியாவிற்கு எதிராக அவர்களின் செயல்பாடும், போராட்டக்காரர்களின் செயல்களையும் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அன்று இந்தியா செய்த உதவியை இவர்கள் மறந்துவிட்டார்களா? இன்று அவர்கள் அங்குள்ள இந்துக்களுக்கு எதிராகவும் செயல்படுவதையும் ஏற்றுக்கொள்ள முடிய வில்லை இதுதான் அவர்களுடைய குணம். இனிமேல் நாம் எப்படி வாழ வேண்டுமென்று இவர்களிடம் இருந்து நாம் நிறைய இன்னும் பாடங்கள் கற்றுக் கொள்ள வேண்டியுள்ளது. கற்றுக் கொள்வோம்.
ஒன்றேகுலம் ஒருவனே தேவன் என்றுச் சொல்வது திருமந்திரம். இறைவன் ஓருவன், அவன் எல்லா உயிர்களிலும் குடிக் கொண்டுள்ளான் என்பதுதான் இதன் பொருள். காக்கையும் குருவியும் எங்கள் சாதியென்று பாடியவர் பாரதியார்?இதையெல்லாம் மற்றவர்கள் உணர்ந்துள்ளார்களா அல்லது இதை பற்றி பேசுகின்றார்களா? இறைவன் எந்த உயிர்களையும் உயர்த்தியோ தாழ்த்தியோ படைக்கவில்லை என்பதுதான் சேதி உண்மையும் அதுவே. திருக்குறளின் இப்படியொரு பாடல். " இரந்து வாழ்தல் வேண்டின் பரந்துக் கெடுக உலகு இயற்றியான்". இங்கே உலகு இயற்றியான் என்பது இறைவனை குறிக்கின்றது. ஆதாவது உயிர்களின் படைப்பில் பிச்சையெடுத்து இரந்து ஓருயிர் வாழவேண்டுமென்று அந்த இறைவன் படைப்பிலிருந்தால் அவனை பரந்துக் கெடுக என்கின்றது குறள். கொஞ்சம் சிந்தித்துப் பாருங்கள் இதுதான் நம் சைவ சமய நெறி.
நம் இந்துமதத்திலும் ஏற்றுக் கொள்ள முடியாத கோட்பாடுகள், சாதிவெறித் தனங்கள், தீண்டாமைகள் அதனால் நம்மிடையே ஏற்படும் உயர்வு தாழ்வு, பிரிவினைகள் மற்றும் தீண்டாமைகள் இவற்றை எல்லாம் நாம் சரிச் செய்ய வேண்டும். அப்போதுதான் இந்த மதமாற்றம் போன்ற அசிங்கங்களை கொடூரங்களை கட்டுப் படுத்தமுடியும்.
அவரவர் மதத்தில் ஆயிரம் குறைபாடுகள் மூடநம்பிக்கைகள், ஓட்டைகள், ஏற்றுக் கொள்ள முடியாத கோட்ப்பாடுகள், இருந்தாலும் நாம் அதிலெல்லாம் தலையிடுவதில்லை, அதைப் பற்றி பேசுவதுமில்லை. இருந்தும் ஏன் அவர்கள் நம்மிடம் இன்னும் இந்த வேண்டாத விபரீத விளையாட்டுகளை நடத்துகின்றார்கள். இந்த மதங்களெல்லாம் நேற்றுவந்த மதங்கள் இந்த மண்ணில் காலம் காலமாக மக்கள், பிற மன்னுயிர்கள் எல்லாம் வாழ்ந்துக் கொண்டுதான் இருக்கின்றன. அப்போதெல்லாம் இந்த மதஙகள் ஏன் இவர்களை காப்பாற்ற முன் வரவில்லை. அவர்களெல்லாம் இப்போது எங்கே? என்ன ஆனார்கள் பதில் கிடைக்குமா?
முருகா முருகா இந்தியாவின் இப்போதைய வளர்ச்சிக்கு யார் காரணம் யார் என்று தெரிந்தும் இப்படி ஏசலாமாப்பா?
ஒருவர் மதம் மாற்றப் பட்டால் அவர் இந்தியாவிற்கு எதிராக மாறுகின்றார் என்றால் அதே மதமாற்றம் தமிழகத்தில் நடந்தால் அவர் தமிழர்களின் எதிரியாக மாறிவிடுகின்றார் . மதத்தால் நாம் இந்துக்களாக வாழ்ந்தாலும் நம் உயிர்நாடிப் போன்றது காலத்தையும் வென்று நிற்கின்ற நம் சைவ சமயம் . தமிழும் சைவசமயமும் காலத்தால் பிரிக்க முடியாதவை. "சைவம்" "சமயம்" என்ற இந்த இரண்டுக் சொற்களை கேட்கும் போது எவ்வளவு இனிமையாக இருக்கின்றதென்று தெரிந்துக் கொள்ளலாம் நல்ல இந்துக்களாக வாழ்தலே நாம் அனைவரும் நல்ல சைவ சமயத்தவர்கள் என்பதும் உண்மை. சைவத்தைப் பேணுவோம், போற்றுவோம்.
நூற்றாண்டு காலமாக இது தானே நடந்து வருகிறது