கொலை வழக்கில் தலைமறைவானவர் கைது
அன்னுார்; அன்னுார் அருகே நாகமாபுதூரை சேர்ந்தவர் சரவணன், 21. இவர் 2022 ஜனவரி மாதம் வெட்டிக் கொல்லப்பட்டார். இதை தொடர்ந்து தமிழ்ச்செல்வன், 26. உட்பட நான்கு பேரை போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கு கோவை கோர்ட்டில் நடைபெற்று வருகிறது. தமிழ்ச்செல்வன், கோர்ட்டில் தொடர்ந்து ஆஜராகவில்லை. அவருக்கு கோர்ட் பிடிவாரண்ட் பிறப்பித்தது. அன்னுார் போலீசார் அவரைத் தேடி கைது செய்து கோர்ட்டில் ஆஜர் படுத்தினர்.