உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / பிளாஸ்டிக் பாட்டில்களை பறிமுதல் செய்தால் மிரட்டல் அரசு பணியாளர்கள் குற்றச்சாட்டு

பிளாஸ்டிக் பாட்டில்களை பறிமுதல் செய்தால் மிரட்டல் அரசு பணியாளர்கள் குற்றச்சாட்டு

மேட்டுப்பாளையம்; 'ஊட்டி செல்லும் சுற்றுலா பயணிகள் கார்களில் இருந்து பிளாஸ்டிக் பாட்டில்களை பறிமுதல் செய்தால் மிரட்டுகிறார்கள்' என்று அரசு பணியாளர்கள் குற்றம் சாட்டுகிறார்கள்.கோடை சீசன் துவங்கியதை அடுத்து, ஊட்டிக்கு செல்லும் வாகனங்களுக்கு இ-பாஸ் வழங்கப்பட்டு வருகிறது. வார நாட்களில், 6000, சனி, ஞாயிறு நாட்களில் தலா, 8000 வாகனங்களுக்கு இ-பாஸ் வழங்கப்படுகிறது.இதை கண்காணிக்க, நீலகிரி மாவட்ட நிர்வாகம், மாவட்டத்தின் நுழைவுப் பகுதிகளில், ஐந்துக்கும் மேற்பட்ட இடங்களில் சோதனைச் சாவடிகளை அமைத்து, அரசு அலுவலர்களை பணியில் அமர்த்திஉள்ளது. இவர்கள், சுற்றுலா வாகனங்களை நிறுத்தி இ--பாஸ் உள்ளதா என சோதனை செய்து வருகின்றனர். இது குறித்து அரசு அலுவலர்கள் கூறியதாவது: மேட்டுப்பாளையம் வழியாக தினமும் வார நாட்களில், 1,000 வண்டிகளும், சனி, ஞாயிறு நாட்களில், 1,300 வாகனங்களும், ஊட்டிக்கு செல்கின்றன. இதில் வெளி மாநிலங்கள் மற்றும் வெளி மாவட்டங்களில் இருந்து வரும் சிலர், இ--பாஸ் எடுக்காமல் வருகின்றனர். அவர்களுக்கு உடனடியாக இங்கு இ--பாஸ் எடுத்துக் கொடுக்கப்படுகிறது. விடுமுறை நாளான, சனி, ஞாயிறு ஆகிய இரண்டு நாட்களில் மட்டும், அதிகமான வாகனங்கள் வருகின்றன. ஆனால் இதுவரை யாரையும் திருப்பி அனுப்பவில்லை. ஒவ்வொரு நாளும் மாலை வரை இ--பாஸ் தடையில்லாமல் வழங்கப்படுகிறது. பள்ளிகளுக்கு விடுமுறை விடும்போது, பாதிப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது. வாகனங்களை சோதனை செய்யும் பணியில், நான்கு பேர் மட்டுமே உள்ளனர்.வாகனங்கள் அதிகளவில் வரும்போது, ஒவ்வொரு வாகன இ--பாஸையும் ஸ்கேன் செய்யும் போது, நீண்ட நேரம் ஆகிறது. அப்போது வாகன ஓட்டுநர்கள் நேரம் ஆகிறது என்று சத்தம் போடுகின்றனர். அதனால் மாவட்ட நிர்வாகம் கூடுதலாக பணியாளர்கள் நியமனம் செய்ய வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

மிரட்டல்

வாகனங்களில் தண்ணீர் பாட்டில்கள் உள்ளதா என, சோதனை செய்யும் பணியில் ஈடுபடும், அரசு பணியாளர்கள் கூறியதாவது: பிளாஸ்டிக் தண்ணீர் பாட்டில்களை, நீலகிரி மாவட்டத்திற்குள் எடுத்து வரக்கூடாது என, மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.அதையும் மீறி கொண்டு வந்தால், ஒரு பாட்டிலுக்கு, 20 ரூபாய் அபராதம் விதிக்க வேண்டும் என அறிவித்துள்ளார். கலெக்டர் உத்தரவுபடி, நாங்கள் சோதனை செய்கிறோம். சோதனையின்போது பிளாஸ்டிக் தண்ணீர் பாட்டில்களை பறிமுதல் செய்தால், காரில் உள்ளவர்கள் எங்களுக்கு, எம்.பி., எம்.எல்.ஏ.,வை தெரியும். அதனால் போக விடுகிறீர்களா இல்லையா என பேசி உங்களை என்ன செய்கிறோம் பார் எனவும் மிரட்டுகின்றனர்.மாவட்ட நிர்வாகம் இப்பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

கூறமுதலீ
ஏப் 17, 2025 08:24

இது ஒரு சாதாரண விஷயம் சார் ஒரு பெரிய போர்டுஒன்னு இங்கிலிஷ்லயும் தமிழிலும் பிளாஸ்டிக் பாட்டில் எடுத்துக்க போக கூடாதுன்னு எழுதி வையுங்க பிளாஸ்டிக் பாட்டில் யூஸ் பண்ணா சுற்றுச்சூழல் பாதிப்பு மலையில் என்ன நடக்குதுன்னு எழுதி வைங்க சார் அது போதும் அவங்கள அதை படிக்க சொல்லிட்டு என்ன பண்றேன்னு கேளுங்க பக்கத்திலேயே என்ன பண்ணுங்க ஒரு அம்பது ரூபாய்க்கு எவர்சில் ஒரு பாட்டில் வச்சிருந்த வியாபாரம் பண்ணுங்க அந்த தண்ணி எடுத்துக்கொண்டு அந்த பாட்டில்ல பில்லப் பண்ணிட்டு போகட்டும். நல்ல சுத்தமான அந்த ஊர் தண்ணிய டேங்கில் புடிச்சு வச்சு குடுங்க ஒரு பெரிய போர்டு செக் போஸ்ட் கிட்ட பிளாஸ்டிக் பாட்டில் எடுத்துட்டு போக கூடாதுன்னு சொல்லிட்டு அதனுடைய விளைவுகள் அதாவது பிளாஸ்டிக் பாட்டில் எடுத்துட்டு போனா அதனால் சுற்றுச்சூழல் பாதிப்பு விளைவுகள் என்னென்ன நடக்குதுன்னு போடுங்க சார் போதும் இது என்ன சார் இவ்வளவு பெரிய விஷயம்


ellar
ஏப் 17, 2025 07:01

இங்கு வேலை செய்யும் அரசு அதிகாரிகளின் நிலைமை மிகவும் மோசமாக உள்ளதை ஆட்சியாளர்கள் கருத்தில் கொள்ள வேண்டும் சுற்றுலா வருபவர்கள் தரமான பார்த்துக் கொள்வதும் சுற்றுலாத் துறைக்கு ஒரு தேவைதான் அடங்க மறுப்பவர்கள் அனுமதிக்க மறுக்கப்பட வேண்டியவர்களே


N DHANDAPANI
ஏப் 17, 2025 06:59

நீலகிரி மற்றும் கோவை மாவட்ட ஆட்சியர்கள் இதனை மிகவும் தீவிரமாக கண்காணித்து ஒரு கிலோமீட்டருக்கு முன்பிருந்தே பெரிய அறிவிப்பு பலகையில் வைத்து இவ்வாறு அரசு ஊழியரை மிரட்டுவார்கள் மீது குற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் இரண்டு மாவட்டங்களின் பல்லாயிரக்கணக்கான விவசாயிகள் மற்றும் பொதுமக்களின் வாழ்வாதாரம் சுகாதாரம் பாதிக்கப்படும் நிலையில் அரசின் இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவிக்கப்படுவது அடக்கப்பட வேண்டிய ஒரு சமாச்சாரம்


புதிய வீடியோ