மேலும் செய்திகள்
எஸ்.பி., அலுவலகத்தில் மக்கள் குறைதீர் முகாம்
17-Jul-2025
கோவை; மாவட்ட எஸ்.பி., அலுவலகத்தில் நேற்று, பொதுமக்கள் குறைதீர்ப்பு முகாம் நடந்தது. இதில், குடும்பப் பிரச்னை, பணப்பரிமாற்ற பிரச்னை, இடப்பிரச்னை குறித்த, 55 மனுக்கள் மீது விசாரணை மற்றும் மறுவிசாரணை மேற்கொள்ளப்பட்டது. இதில் ஒரு மனு மீது எப்.ஐ.ஆர்.பதிவு செய்யப்பட்டது. 45 மனுக்களுக்கு சுமூகமான முறையிலும், 9 மனுக்கள் மீது மேல் விசாரணை செய்ய பரிந்துரை செய்தும், தீர்வு காணப்பட்டது. எஸ்.பி.,கார்த்திகேயன் உள்ளிட்டோர் குறைதீர்ப்பு கூட்டத்தில் பங்கேற்றனர்.
17-Jul-2025