உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / பாதுகாப்பு துறையினருக்கு நாளை குறைதீர் கூட்டம்

பாதுகாப்பு துறையினருக்கு நாளை குறைதீர் கூட்டம்

கோவை; பாதுகாப்புத்துறையில் பணிபுரிந்து ஓய்வூதியம் பெறுபவர்களுக்கு நாளை (நவ. 26) குறைதீர்ப்பு முகாம் நடக்கிறது. சென்னை பாதுகாப்பு கணக்குகள் கட்டுப்பாட்டாளர் ஜெயசீலன் அறிக்கை: பாதுகாப்புத்துறையில் பணிபுரிந்து ஓய்வூதியம் பெறுபவர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியம் பெறுபவர்கள் ராணுவத்தினர், கடற்படை, விமானப்படையை சேர்ந்த முன்னாள் படைவீரர்களை சார்ந்தவர்கள், தங்களது வாழ்நாள் சான்று சமர்ப்பிப்பதில் ஏற்படும் சிக்கல்களை தீர்த்து வைக்க, சிறப்பு முகாம் நாளை நடத்தப்படுகிறது.சென்னை பாதுகாப்பு கணக்குகள் கட்டுப்பாட்டாளர் அலுவலகம் மற்றும் தட்ஷின் பாரத் ராணுவம் சார்பாக, ஓய்வூதிய குறை தீர்ப்பு முகாம், நவ., 26 காலை 9:00 மணி முதல் மாலை 6:00 மணி வரை, கோவை ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் உள்ள எஸ்.என்.ஆர். அரங்கில் நடக்கிறது. இதில் சிறப்பு விருந்தினராக கோவை போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் பங்கேற்கிறார். இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.

ஆவணங்கள் என்னென்ன?

முகாமில் பங்கேற்க விரும்பும் முன்னாள் படை வீரர் மற்றும் சார்ந்தோர் தங்களது படை பணிச்சான்று, அடையாள அட்டை, ஓய்வூதிய ஒப்படைப்பு ஆணை, ஆதார் அட்டை, பான்கார்டுமற்றும் வங்கி கணக்கு புத்தகம் ஆகிய ஆவணங்களின் அசல் உடன், நேரில் வந்து தங்கள் குறைகளை நிவர்த்தி செய்து கொள்ளலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை