உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / வீடு புகுந்து நகை திருட்டு

வீடு புகுந்து நகை திருட்டு

பெ.நா.பாளையம்; பெரியநாயக்கன்பாளையம், பிரஸ் காலனி, ஸ்ரீராம் நகரில் வசித்து வருபவர் சிவரூபினி. அதே பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். நேற்று முன்தினம் வீட்டை பூட்டிவிட்டு வீட்டின் சாவியை அங்கிருந்த இ.பி., பெட்டியில் வைத்துவிட்டு, கோபியில் உள்ள தனது உறவினர் வீட்டுக்கு சென்று திரும்பினார். வீட்டின் முன் பக்க கதவு திறந்து கிடந்தது.வீட்டுக்குள் பீரோவில் வைக்கப்பட்டிருந்த இரண்டு பவுன் எடை உள்ள நகை காணாமல் போய் இருந்தது. பெரியநாயக்கன்பாளையம் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை