உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / நம் ஊரை சேர்ந்தவர் இருக்கும்போது நான் போட்டியிட அவசியம் இல்லை

நம் ஊரை சேர்ந்தவர் இருக்கும்போது நான் போட்டியிட அவசியம் இல்லை

சூலுார்; துணை ஜனாதிபதி வேட்பாளர் தேர்வு குறித்து மயில்சாமி அண்ணாதுரை பதில் அளிக்கையில், 'ஏதாவது பொறுப்பு கொடுக்கப்பட்டால் அதை தட்டிக்கழிக்க வேண்டிய அவசியம் இல்லை' என, கூறினார். கோவை அருகே உள்ள கே.ஐ.டி., கல்லுாரியில் நடந்த விழாவில் பங்கேற்க இஸ்ரோ முன்னாள் தலைவர் மயில்சாமி அண்ணாதுரை வந்தார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறுகையில், துணை ஜனாதிபதி தேர்தலில் என்னுடைய பெயரும் பரிசீலிக்கப்பட்டது குறித்து மகிழ்ச்சி. எதாவது பொறுப்பு கொடுக்கப்பட்டால் அதை தட்டிக்கழிக்க வேண்டிய அவசியம் இல்லை. ஒரு பொறுப்பை அனைவரும் சேர்ந்து கொடுத்தால் சிறப்பாக இருக்கும் என, முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் கூறினார். நம் ஊரை சேர்ந்தவர் ஒருவர் போட்டியில் இருக்கும்போது போட்டியிட வேண்டிய அவசியம் இல்லை, என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !