இன்ஸ்பெக்டர் பொறுப்பேற்பு
கோவில்பாளையம்; கோவில்பாளையம் இன்ஸ்பெக்டராக இளங்கோ பொறுப்பேற்றார்.கோவில்பாளையம், போலீஸ் ஸ்டேஷனில் இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வந்த செல்வி, இரண்டு நாட்களுக்கு முன், கோவை ரூரல் போலீஸ் எஸ்.பி., அலுவலகத்திற்கு மாற்றம் செய்யப்பட்டார்.இதையடுத்து வேலுார் மாவட்டத்தில், மதுவிலக்கு நுண்ணறிவு பிரிவில் பணிபுரிந்து வந்த இன்ஸ்பெக்டர் இளங்கோ கோவில்பாளையத்துக்கு மாற்றப்பட்டு நேற்று பொறுப்பேற்றார்.புதிய இன்ஸ்பெக்டருக்கு, எஸ்.ஐ.,கள் மற்றும் போலீசார் வாழ்த்து தெரிவித்தனர்.