புதிய குற்றவியல் சட்டங்கள் அறிமுகம்!
மத்திய அரசு, ஏற்கனவே நடைமுறையிலிருந்த மூன்று பழைய குற்றவியல் சட்டங்களை மாற்றி, புதிய சட்டம் கொண்டு வந்துள்ளது.இந்திய தண்டனை சட்டம் (ஐ.பி.சி) -1860, 'பாரதிய நியாய சன்ஹிதா-2023' (பி.என்.எஸ்.,) என்றும், குற்றவியல் நடைமுறை சட்டம் (சி.ஆர்.பி.சி) -1973, 'பாரதிய நாகரிக் சுரக்ஷா சன்ஹிதா-2023' (பி.என்.எஸ்.எஸ்)என்றும், இந்திய சாட்சிய சட்டம் (ஐ.இ.ஏ) -1872, 'பாரதிய சாக்ஷயா அதீனியம்-2023' (பி.எஸ்.ஏ)என்றும் மாற்றப்படுகிறது.511 சட்டப்பிரிவுகளை உள்ளடக்கிய இந்திய தண்டனை சட்டம், 356 சட்டப்பிரிவாக குறைக்கப்பட்டுள்ளது. 175 சட்டப்பிரிவு மாற்றப்பட்டுள்ளது. 8 சட்டப்பிரிவு சேர்க்கப்பட்டும், 22 பிரிவு ரத்து செய்தும் புதிய சட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது.அதேபோல, 484 சட்டப்பிரிவு உள்ளடங்கிய குற்றவியல் நடைமுறை சட்டம், 533 சட்டப்பிரிவாக அதிகரிக்கப்பட்டுள்ளது. 160 சட்டப்பிரிவு மாற்றப்பட்டு, 8 புதிய பிரிவு சேர்க்கப்பட்டுள்ளது. 22 பிரிவு ரத்து செய்யப்பட்டுள்ளது.167 சட்டப்பிரிவு உள்ளடக்கிய இந்திய சாட்சிய சட்டம் திருத்தப்பட்டு, 23 பிரிவாக மாற்றியமைக்கப்பட்டுள்ளது. ஒரு பிரிவு சேர்க்கப்பட்டு, 5 பிரிவு ரத்து செய்யப்பட்டுள்ளது.இந்த புதிய சட்டங்கள் , இந்தாண்டு ஜூலை, 1- முதல் நடைபெறும் குற்றங்களுக்கு மட்டுமே பொருந்தும். அதற்கு முன்பு நடந்த குற்றங்களுக்கு, அப்போது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்ட சட்டப்பிரிவின் கீழ் தொடர்ந்து விசாரணை நடைபெறும்.