உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / போக்குவரத்து மாற்றத்துக்கு எதிரான வழக்கில் நீதிபதிகள் ஆய்வு

போக்குவரத்து மாற்றத்துக்கு எதிரான வழக்கில் நீதிபதிகள் ஆய்வு

கோவை; நீதிமன்ற வளாகம் அருகில், போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டது தொடர்பான வழக்கில், நீதிபதிகள் நேரில் ஆய்வு மேற்கொண்டனர்.கோவை மாநகர போக்குவரத்து போலீசார், ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் எதிரில், எந்த முன்அறிவிப்பு இன்றி, சாலையை மாற்றி அமைத்தனர். இதனால், கோர்ட் அருகில் எந்நேரமும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதால், நிரந்தர மக்கள் நீதிமன்றத்தில் புகார் மனு தாக்கல் செய்யப்பட்டது.இந்த மனுவை விசாரணைக்கு ஏற்றுக்கொண்ட நீதிமன்றம், மாநகர போக்குவரத்து அதிகாரிகள் பதிலளிக்க நோட்டீஸ் அனுப்பி வைக்கப்பட்டது. அதன்படி, போக்குவரத்து அதிகாரிகள் பதில் மனு தாக்கல் செய்தனர். வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, நிரந்தர மக்கள் நீதிமன்ற நீதிபதி நாராயணன், சார்பு நீதிபதி ரமேஷ் மற்றும் வக்கீல் சங்க தலைவர் பாலகிருஷ்ணன், போக்குவரத்து போலீஸ் துணை கமிஷனர் அசோக்குமார், சாலை பாதுகாப்பு அதிகாரி மற்றும் மனுதாரர் ராஜலிங்கம் சார்பில் வக்கீல் அசோக் ஆகியோர், போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்ட பகுதியை நேரில் ஆய்வு செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை