உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / சாலையூர் பழனி ஆண்டவர் கோவிலில் கந்த சஷ்டி விழா

சாலையூர் பழனி ஆண்டவர் கோவிலில் கந்த சஷ்டி விழா

அன்னுார்: சாலையூர் பழனி ஆண்டவர் கோவிலில் கந்த சஷ்டி விழா நாளை (22ம் தேதி) துவங்குகிறது. சித்தர்கள் வழிபாடு செய்த, பழமையான சாலையூர் பழனி ஆண்டவர் கோவிலில், கந்த சஷ்டி திருவிழா நாளை (22ம் தேதி) துவங்குகிறது. காலை 7:00 மணிக்கு, மூலவருக்கு திருமஞ்சனமும், 9:15 மணிக்கு காப்பு கட்டுதலும், வேள்வி பூஜையும் நடக்கிறது. இரவு 7:00 மணிக்கு மூலமந்திர அர்ச்சனை நடைபெறுகிறது. தொடர்ந்து 27ம் தேதி வரை தினமும் வேள்வி பூஜை, மூல மந்திர அர்ச்சனை நடக்கிறது. வரும் 28ம் தேதி மதியம் 12:00 மணிக்கு தெய்வானை திருக்கல்யாண உற்சவமும், பேரொளி வழிபாடும் நடக்கிறது. மாலை 5:00 மணிக்கு சிரவை ஆதீனம் குமரகுருபர சுவாமிகள் அருளுரை வழங்குகிறார். விழாவில் பங்கேற்று இறையருள் பெற நிர்வாகிகள் அழைப்பு விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !