மதுர காளியம்மன் கோவிலில் செப்.4ல் கும்பாபிஷேகம்
அன்னுார்; அன்னூர் அருகே மதுரகாளியம்மன் கோவிலில் கும்பாபிஷேக விழா வருகிற 31ம் தேதி அதிகாலை 4:00 மணிக்கு கோ பூஜை உடன் துவங்குகிறது. செப். 1ம் தேதி காலை வேள்வி வழிபாடு நடைபெறுகிறது. 2ம் தேதி மதுர காளியம்மன் எழுந்தருளும் திருக்குடத்திற்கு வழிபாடு செய்தல் நடக்கிறது. செப். 3ம் தேதி காலை புனித நீர் வழிபாடு, இரண்டாம் கால வேள்வி, 4ம் தேதி காலை 9:00 மணிக்கு விமான கலசங்களுக்கும், மூலவர் மதுர காளியம்மனுக்கும் கும்பாபிஷேகம் நடைபெறுகிறது.