வக்கீல்கள் இன்று கோர்ட் புறக்கணிப்பு
கோவை; சென்னை ஐகோர்ட் வளாகத்திற்குள் கடந்த, 2009, பிப்., 19ல், போலீசார்- வக்கீல் இடையே மோதல் ஏற்பட்டது. வக்கீல்கள் பலர் தாக்கப்பட்டதை கண்டித்து, ஆண்டுதோறும் கருப்பு தினமாக அனுசரித்து வருகின்றனர்.தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி வக்கீல் சங்க கூட்டு நடவடிக்கை குழு, வேண்டுகோள் படி இந்தாண்டும், இன்று கருப்பு தினமாக அனுசரித்து, கோவை வக்கீல்கள் நீதிமன்ற புறக்கணிப்பில் ஈடுபடுகின்றனர். மத்திய அரசு புதிதாக கொண்டுவர திட்டமிட்டுள்ள, வழக்கறிஞர் சட்டத்திருத்த மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்தும், வழக்கறிஞர் பாதுகாப்பு சட்டத்தை இயற்ற கோரியும், வழக்கறிஞர் சேமநல நிதியினை ரூ.25 லட்சமாக உயர்த்தக் கோரியும், கோவை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் முன் ஆர்ப்பாட்டம் செய்கின்றனர்.