உள்ளூர் செய்திகள்

 மா.கம்யூ., போராட்டம்

கோவைப்புதுார்: கோவைப்புதுார் பகுதியை சேர்ந்தவர் செந்தில் பிரபு. சி.ஐ.டி.யூ., டாஸ்மாக் ஊழியர்கள் சங்க பொதுச் செயலாளர். இவரது மகள் அனு கீர்த்தனா, 19. நீட் நுழைவு தேர்வுக்கு தயாராகி வந்த நிலையில், நேற்று அவர் தற்கொலை செய்து கொண்டார். இதையடுத்து நீட் தேர்வை ரத்து செய்ய கோரியும், இறந்த மாணவி குடும்பத்துக்கு அரசு நிதி உதவி வழங்க வலியுறுத்தியும், மா.கம்யூ., மாவட்டச் செயலாளர் பத்மநாபன் தலைமையில் கம்யூ., கட்சியினர் இ.எஸ்.ஐ., மருத்துவமனை முன் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். கோவை தெற்கு கோட்டாட்ச்சியர் மாருதி பிரியா, நேரில் வந்து குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்ததோடு, குடும்பத்துக்கு நிதி உதவி வழங்க அரசுக்கு பரிந்துரை செய்வதாக தெரிவித்தார். அதனால் தர்ணா போராட்டத்தை கைவிட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை