மலம்புழா பூங்கா இன்று முதல் மூடல்
பாலக்காடு; பாலக்காடு அருகேயுள்ள, மலம்புழா பூங்கா இன்று முதல், மறு அறிவிப்பு வரும் வரை மூடப்பட்டுள்ளது. கேரள மாநிலம் பாலக்காட்டில், முக்கிய சுற்றுலா தலங்களில் ஒன்றான மலம்புழா பூங்கா உள்ளது. இங்கு மத்திய அரசின் 'சுவதேசி தர்சன்' திட்டத்தின் கீழ், ரூ.78.78 கோடியின் நவீன மயமாக்கும் பணிகள் நடக்கிறது. இதனால், இன்று (11ம் தேதி) முதல் மறுஅறிவிப்பு வரும் வரை சுற்றுலா பயணியருக்கு அனுமதி இல்லை என, நிர்வாக பொறியாளர் ரஸ்மி தெரிவித்தார். அடுத்த ஆண்டு மார்ச் மாத இறுதிக்குள் பணிகளை நிறைவு செய்ய திட்டமிட்டுள்ளது.