| ADDED : டிச 05, 2025 08:36 AM
வால்பாறை: வால்பாறை ஐயப்ப சுவாமி கோவிலில் மண்டல பூஜை திருவிழா வரும், 17ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்குகிறது. வால்பாறை சுப்ரமணிய சுவாமி கோவில் வளாகத்தில் எழுந்தருளியுள்ள ஐயப்ப சுவாமி கோவிலின், 39ம் ஆண்டு மண்டல பூஜைத்திருவிழா, வரும் 17ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்குகிறது. வரும், 16ம் தேதி அரச மரத்து விநாயகருக்கு அபிேஷகம் மற்றும் வள்ளி, தெய்வானை சமேத சுப்ரமணிய சுவாமிக்கு, அபிேஷக பூஜைகள் நடக்கிறது. 19ம் தேதி காலை, 10:00 மணிக்கு நடுமலை ஆற்றில் ஐயப்ப சுவாமிக்கு அபிேஷகம் மற் றும் ஆறாட்டுவிழா நடக்கிறது. வரும், 20ம் தேதி, காலை, 11:00 மணிக்கு அன்னதானம் வழங்கும் விழாவும், மாலை, 3:00 மணிக்கு புதிய பஸ் ஸ்டாண்டிலிருந்து ஐயப்ப பக்தர்கள் பாலக்கொம்பு ஊர்வலமும் நடக்கிறது. வரும், 21ம் தேதி காலை, 11:00 மணிக்கு ஐயப்ப சுவாமிக்கு புஷ்பாஞ்சலி பூஜையும், மாலை, 6:00 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட தேரில் ஐயப்ப சுவாமி எழுந்தருளி திருவீதி உலா சென்று அருள்பாலிக்கிறார். விழா ஏற்பாடுகளை, அகிலபாரத ஐயப்ப சேவா சங்க தலைவர் மூர்த்தி, செயலாளர் சந்திரசேகர், பொருளாளர் அழகர்சாமி உள்ளிட்ட நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.