உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / மண்டல பூஜை திருவிழா; நிர்வாகிகள் ஆலோசனை

மண்டல பூஜை திருவிழா; நிர்வாகிகள் ஆலோசனை

வால்பாறை; வால்பாறை சுப்பிரமணிய சுவாமி கோவில் வளாகத்தில் எழுந்தருளியுள்ள ஐயப்ப சுவாமி கோவிலின், 38ம் ஆண்டு மண்டல பூஜைத்திருவிழா, டிசம்பர் மாதம் 18ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்குகிறது.இது தொடர்பான இரண்டாவது கட்ட ஆலோசனைக்கூட்டம், அகிலபாரத ஐயப்ப சேவா சங்க தலைவர் மூர்த்தி தலைமையில் நடந்தது. கூட்டத்திற்கு சுப்புராஜ்குருசாமி, பொருளாளர் அழகிரி ஆகியோர் முன்னிலை வகித்தனர். செயலாளர் சந்திரசேகர் வரவேற்றார். இந்த ஆண்டு ஐயப்பசுவாமி கோவில் மண்டல பூஜை திருவிழா வரும், 21,22 மற்றும், 23ம் தேதிகளில் சிறப்பாக நடத்துவது என்று, கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.கூட்டத்தில், அகிலபாரத ஐயப்ப சேவா சங்க விழா கமிட்டி நிர்வாகிகள் மருதமுத்து, செல்லப்பன், ஆறுமுகம், குணசேகரன், சுருளிவேல், சின்னப்பராஜ் உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை