உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / மருதமலை கோவில் உண்டியலில் 81.82 லட்சம் ரூபாய் காணிக்கை

மருதமலை கோவில் உண்டியலில் 81.82 லட்சம் ரூபாய் காணிக்கை

வடவள்ளி; மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவில் உண்டியலில், 81.82 லட்சம் ரூபாய் பக்தர்கள் காணிக்கையாக பெறப்பட்டது. முருகனின் ஏழாம் படைவீராக மருதமலை சுப்பிரமணியசுவாமி கோவில் கருதப்படுகிறது. இக்கோவிலில் உண்டில் எண்ணிக்கை நேற்று நடந்தது. இதில், நிரந்தர உண்டியலில், 76,52,870 ரூபாயும், திருப்பணி உண்டியலில், 1,28,347 ரூபாயும்; கோசாலை உண்டியலில், 3,57,131 ரூபாயும், உப கோவில் உண்டியலில், 43,891 ரூபாயும் என, மொத்தம், 81,82,239 ரூபாய் பக்தர்கள் காணிக்கையாக இருந்தது. அதோடு, 115 கிராம் தங்கமும்; 5 கிலோ 250 கிராம் வெள்ளியும்; 10 கிலோ பித்தளையும் இருந்தது.அறநிலையத்துறை துணை கமிஷனர் விமலா, மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவில் துணை கமிஷனர் செந்தில்குமார் ஆகியோர் உண்டியல் எண்ணும் பணியை மேற்பார்வையிட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ