உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / மாதா அமிர்தானந்தமயி தேவி 22ம் தேதி கோவை வருகை

மாதா அமிர்தானந்தமயி தேவி 22ம் தேதி கோவை வருகை

பெ.நா.பாளையம்,; கோவை கவுண்டம்பாளையம் அருகே நல்லாம்பாளையம், ராமசாமி நகரில் அமிர்த வித்யாலயா வளாகத்தில் மாதா அமிர்தானந்தமயி தேவி மடம் உள்ளது. இங்குள்ள பிரம்மஸ்தான ஆலய, 24வது ஆண்டு விழாவில் கலந்து கொள்ள இம்மாதம், 22, 23 ஆகிய தேதிகளில் மாதா அமிர்தானந்தமயி தேவி கோவை வருகிறார்.பிரம்மஸ்தான கோவில் அருகே பள்ளி வளாகத்தில் நடக்கும் முதல் நாள் நிகழ்ச்சியான, இம்மாதம், 22ம் தேதி சனிக்கிழமை காலை, 7:30 மணிக்கு சனி தோஷ நிவாரண பூஜை, ஸ்ரீ லலிதா சகஸ்ர நாம அர்ச்சனை நடக்கிறது. தொடர்ந்து காலை, 11:00 மணிக்கு அம்மாவின் சத் சங்கம், பஜனை, தியானம் மற்றும் தரிசன நிகழ்ச்சிகள் நடக்கின்றன.இரண்டாம் நாள், 23ம் தேதி காலை, 7:30 மணிக்கு ராகுதோஷ நிவாரண பூஜை, ஸ்ரீ லலிதா சகஸ்ர நாம அர்ச்சனை அதைத் தொடர்ந்து காலை, 11:00 மணிக்கு அம்மாவின் சத் சங்கம், பஜனை, தியானம் மற்றும் தரிசனம் நடக்கிறது.இதை ஒட்டி நல்லாம்பாளையம் அமிர்த வித்யாலயா வளாகத்தில் மாதா அமிர்தானந்தமயி தேவி ஆன்மீக உரையாற்றும் பகுதியில் பிரம்மாண்டமான பந்தல் அமைக்கப்படுகிறது. இதற்கான பந்தக்கால் நடும் விழா நேற்று நல்லாம்பாளையம் அமிர்த வித்யாலயா வளாகத்தில் நடந்தது. நிகழ்ச்சியில் மாதா அமிர்தானந்தமயி தேவி சீடர்கள் உள்ளிட்ட திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை