வாசகர்கள் கருத்துகள் ( 1 )
பிரதி வெள்ளி மற்றும் எதிர் திசையில் ஞாயிறு கிழமைகளில் இயக்க வேண்டும்
கோவை; மேட்டுப்பாளையம் - திருநெல்வேலி - மேட்டுப்பாளையம் சிறப்பு ரயில்களின் சேவை நீட்டிக்கப்பட்டுள்ளது. மேட்டுப்பாளையம் - திருநெல்வேலி(06030) ரயில், ஞாயிறு இரவு, 7:00 மணிக்கு திருநெல்வேலியில் இருந்து புறப்பட்டு மறுநாள் காலை, 7:30 மணிக்கு, மேட்டுப்பாளையம் வந்தடையும்.திருநெல்வேலி - மேட்டுப்பாளையம் (06029) சிறப்பு ரயில், திங்கள் இரவு 7:45 மணிக்கு மேட்டுப்பாளையத்தில் இருந்து புறப்பட்டு, மறுநாள் காலை 7:45 மணிக்கு திருநெல்வேலி சென்றடையும். ஏ.சி., இரண்டடுக்கு, மூன்றடுக்கு, படுக்கை வசதி, இரண்டாம் வகுப்பு பெட்டிகள் ரயிலில் இருக்கும். சேரன்மாதேவி, கள்ளிடைக்குறிச்சி, அம்பாசமுத்திரம், கீழ்கடையம், பாவூர்சத்திரம், தென்காசி, கடையநல்லுார், சங்கரன்கோவில், ராஜபாளையம், திருவில்லிபுத்துார், சிவகாசி, விருதுநகர், மதுரை, திண்டுக்கல், ஒட்டன்சத்திரம், பழனி, உடுமலை, பொள்ளாச்சி, கிணத்துக்கடவு, போத்தனுார், கோவை ரயில்வே ஸ்டேஷன்களில் நின்று செல்லும்.இச்சிறப்பு ரயிலின் இயக்கம், வரும், 31ம் தேதியுடன் முடிவடைய உள்ள நிலையில், சேவை நவ.30, டிச. 1ம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.
பிரதி வெள்ளி மற்றும் எதிர் திசையில் ஞாயிறு கிழமைகளில் இயக்க வேண்டும்