5-ல் மிலாது நபி - ஹாஜி அறிவிப்பு
கோவை: கோவை மாவட்டத்தில் உள்ள ஹாஜி அப்துல் ரஹீம் அறிக்கை: கடந்த 24 (ஞாயிறு) அன்று மாலை, ரபீஉல் அவ்வல் மாத முதல் பிறை தமிழகத்தில் தென்பட்டதாக, தமிழக அரசு உதவி ஹாஜி அறிவிப்பின்படி, 25 (திங்கள்) அன்று, முதல் பிறையாக கணக்கிடப்படுகிறது. செப்.5ம் தேதி (வெள்ளி) மிலாது நபி கடைபிடிக்கப்படும். இவ்வாறு, அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.