தேசிய கைத்தறி நெசவாளர் தின விழா
சோமனூர்; தமிழ்நாடு நெசவு தறிக்காரர்கள் வாழ்வுரிமை இயக்கம் சார்பில், சோமனூரில் தேசிய கைத்தறி நெசவாளர் தின விழா நடந்தது. மாநில ஒருங்கிணைப்பாளர் ராமசாமி தலைமை வகித்தார். செயலாளர் கணேசன் வரவேற்றார். தேவாங்கர் முன்னேற்ற அமைப்பின் மாநில தலைவர் விஜயகுமார், வக்கீல் கண்ணன், கவுரவ தலைவர் ராமச்சந்திர கிருஷ்ணன் ஆகியோர் முதியோர்களுக்கு வேஷ்டி, சேலைகளை வழங்கி பேசினர்.