உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / இளநீர் விலையில் மாற்றமில்லை

இளநீர் விலையில் மாற்றமில்லை

பொள்ளாச்சி; பொள்ளாச்சி, ஆனைமலை தாலுகா பகுதியில், இளநீர் பண்ணை விலை கடந்த வார விலையை ஒப்பிடுகையில் எவ்வித மாற்றமும் கிடையாது. ஆனைமலை இளநீர் உற்பத்தியாளர் சங்கத்தின், தலைமை ஒருங்கிணைப்பாளர் சீனிவாசன் கூறியதாவது: இந்த வாரம், நல்ல தரமான குட்டை நெட்டை வீரிய ஒட்டு இளநீர் விலை, கடந்த வார விலையை ஒப்பிடுகையில், எவ்வித மாற்றமும் இன்றி, 45 ரூபாய் என நிர்ணயம் செய்யப்படுகிறது. அதன்படி, ஒரு டன் இளநீரின் விலை, 18,500 ரூபாய் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து, இளநீர் வரத்து கூடுதலாக இருந்தாலும் அதன் தேவையும் அதிகரித்துள்ளது. அதன் காரணமாக, இளநீர் அறுவடை சுறுசுறுப்பாக முன்கூட்டியே மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தேங்காய் சந்தை நிலையாக ஒரு டன், 70 ஆயிரம் ரூபாய்க்கு குறையாமல் உள்ளது. எனவே, இளநீர் விலையை குறைத்து விற்க வேண்டிய அவசியம் இல்லை. இவ்வாறு, அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி